மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாராணசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள்

புதுடெல்லி: பிர​யாக்​ராஜின் மகா கும்​பமேளா​வில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்​துக் கொண்ட துறவி​களில் பலரும் வாராணசி, அயோத்​திக்கு செல்​கின்​றனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் 144 ஆண்டு​களுக்கு பிறகு மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்​கியது. இதில் மகர சங்க​ராந்தி, மகா பவுர்​ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்​திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்​பெறுகிறது. இவற்றில் 5-வது புனிதக் குளியல் கடந்த 3-ம் தேதி வசந்த் பஞ்சமி​யில் முடிந்​தது.

இதையடுத்து மகா கும்​பமேளா​வில் உள்ள அகாடாக்​களில் பறக்​கும் தங்கள் ஆன்மிக காவிக் கொடிகளின் உயரத்தை துறவிகள் குறைத்து​விட்​டனர்.

மொத்தம் உள்ள 13 அகாடாக்​களில் 3 முக்​கியப் பிரிவுகள் உள்ளன. இவர்​களில் சைவர்கள் 7, வைராகிகள் மற்றும் உதாசிகள் தலா 3 அகாடாக்கள் உள்ளன. சைவர்​களின் 7 அகாடா துறவிகள் வாராணசி சென்று காசி விஸ்​வநாதரை தரிசிக்க உள்ளனர். இவர்கள் காசி​யில் பிப்​ரவரி 26-ம் தேதி மகா சிவராத்​திரி அன்று மாபெரும் ஊர்வலம் நடத்து​கின்​றனர். இவர்​களில் சில அகாடா​வினர், 15-ம் தேதி ஹரித்துவாரில் சிவனை தரிசிக்க செல்​கின்​றனர்.

அதன்​பின்னர் ஹோலி பண்டிகையை கொண்​டாடி​விட்டு துறவிகள் தங்கள் முகாம்​ களுக்கு திரும்​புவார்​கள். அயோத்தி ராமர் கோயிலுக்கு உதாசி மற்றும் சில வைஷ்ணவ அகாடாக்​களின் துறவிகள் செல்​வார்​கள்.

இதனால், மகா கும்​பமேளா​வில் கூட்டம் குறைந்​தா​லும், மகா சிவராத்​திரிக்கு பிறகே நிறைவடை​யும். இந்நாளில் வரும் ராஜ குளியலுக்கு அதிக எண்ணிக்கை​யில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதனிடையே, அகாடாக்​களுக்கு 7-ம் தேதி புதிய தலைவர்கள் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். அகாடாக்கள் நிர்​வகிக்​கும் கோயில்​களுக்கான மஹந்த் எனும் தலைமைப் பண்டிதர்​களும் அன்றைய தினம் தேர்வு செய்யப்​படு​வார்​கள். இந்த நடைமுறை முடிந்த பிறகு ஐதீக முறைப்​படி, கடி மற்றும் பகோடி (மோர்​குழம்பு மற்றும் பகோடா) சமைத்து உண்ட பின் பிரயாக்​ராஜில் இருந்து கிளம்பி விடு​வார்​கள்.

மொத்​த​முள்ள 12 அகாடாக்​களில் சைவ அகாடாக்கள் பலம் வாய்ந்​தவர்​களாகக் கருதப்​படு​கின்​றனர். இதில் போர் வீரர்​களாகக் கருதப்​படும் நாகா துறவிகள் இடம்​பெற்றிருப்​பதும், அதன் மடங்கள் மற்றும் கோயில்​களுக்கான சொத்​துக்​கள் அதிகமாக இருப்​பதும் இதற்கு ​காரணம். அகாடாக்​களுக்கு நாடு ​முழு​வ​தி​லும் பல கோடி ம​திப்புள்ள நிலங்​களும் இருப்பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.