வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணம் ஹாமில்டன் நகரில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் டிபியாசி (வயது 39). இவரது மனைவி எலிசபெத் (42) மெர்சர் பிராந்திய போலீஸ் அதிகாரி ஆவார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் இருவரும் குழந்தைகள் முன்பு ஆபாச புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர்களது செல்போனைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது 1,000-க்கும் மேற்பட்ட ஆபாச புகைப்படங்கள் அவர்களது செல்போனில் எடுக்கப்பட்டன. அவற்றில் பல புகைப்படங்களில் அந்த குழந்தைகளும் இருந்தனர். இதனையடுத்து போலீஸ் தம்பதி இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.