ஜாம்ஷெட்பூர்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் மேலும் ஒரு கோல் அடித்தத்து. ஜாம்ஷெட்ர் அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அசத்தல் வெற்றி பெற்றது. இந்த தொடரில் புவனேஸ்வரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா – ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.