திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தைகள் நடமாட்டம் காரணமாக பக்தர்களுக்கு புதியநிபந்தனைகள் விதிக்கப்பட் டுள்ளன. திருப்பதியில் அலிபிரி மலைப்பாதையில் தற்போது சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதை அறிந்த தேவஸ்தானம், பக்தர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள் ளது. அதன்படி, காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரைமலையேறி செல்லும் பக்தர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இல்லை. மதியம் 2 மணிக்கு பிறகு, 70 முதல் 100 பேர் கொண்ட பக்தர்கள் கூட்டம், கூட்டமாக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் இவர்கள் இரவு 9.30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கும்பலில் 12 வயதுக்குட்பட்டோருக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.
