கோவா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அதிலும் குறிப்பாக வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை குறைவதற்கு அங்கு இட்லி – சாம்பார் விற்கப்படுவது தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோவாவின் கலங்குட்டு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும் பாஜக கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கேல் லோபா செய்தியாளர் சந்திப்பில் இதைக் கூறினார். “கோவா கடற்கரை பகுதியில் சொந்தமாக இடம் வைத்திருக்கும் அம்மாநிலத்தவர்கள் தங்கள் நிலத்தை வெளிமாநிலத்தவருக்கு வாடகை அல்லது லீசுக்கு விடுகின்றனர். அந்த இடங்களில் வியாபாரம் […]
