தமிழக கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகளுக்கு வாய்ப்பு: புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சென்னை: தமிழகக் கடலோரப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் ஏற்​படு​வதற்​கான வாய்ப்​பு​கள் அதி​கம் உள்​ள​தாக இந்​திய புவி​யியல் ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் தெரி​வித்​தார்.

இந்​திய புவி​யியல் ஆய்வு மையத்​தின் 175-வது நிறுவன தின​விழா சென்னை கிண்​டி​யில் உள்ள மண்டல அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் ஆய்வு மையத்​தின் இயக்​குநர் விஜயகு​மார், முன்​னாள் இயக்​குநர் ஏ.சுந்​தரமூர்த்தி உட்பட பல்​வேறு அலு​வலர்​கள், துறை​சார் நிபுணர்​கள் கலந்​து​கொண்டு தங்​கள் கருத்​துகளை பகிர்ந்து கொண்​டனர். 175-வது ஆண்டை முன்​னிட்டு மையத்​தின் சார்​பில் சிறப்பு கண்​காட்​சிக்​கும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது.

இந்​நிகழ்ச்​சி​யில், ஆய்வு மைய இயக்​குநர் விஜயகு​மார் கூறிய​தாவது: மழை பெய்​வது போன்று நில அதிர்​வு​களும் தொடர்ந்து நடை​பெற்​றுக் கொண்டே இருக்​கின்​றன. சமீப​கால​மாக நில அதிர்​வின் பதிவு​களும் அதி​க​மாக உள்​ளன. சென்னை கருங்​கல் மீது உள்ள ஒரு பகு​தி​யாகும். அதனால் சென்​னை​யில் நில அதிர்வு தொடர்​பாக பயப்பட வேண்​டிய சூழல் இல்​லை. ஆனால் கடலோரப் பகு​தி​களில் கூடு​தல் கவனத்​துடன் இருக்க வேண்​டும். அங்கு உயர்ந்த கட்​டிடங்​களைக் கட்​டா​மல் இருப்​பது நல்​லது. அந்​தப் பகு​தி​களில் நில அதிர்​வு​கள் வர அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன.

அதே​போல், தமிழகத்​தில் எந்​தெந்​தப் பகு​தி​களில் நிலச்​சரிவு ஏற்​படக்​கூடிய அபா​யம் உள்​ளது என்ற விவரங்​களை தமிழக அரசிடம் தெரி​வித்​துள்​ளோம். இது த​விர நாடு முழு​வதும் உள்ள கனிமவளங்​கள் தொடர்​பாக ஆய்வு நடத்தி மத்​திய அரசுக்கு அறிக்கை அனுப்​பப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் திரு​வண்​ணா​மலை, விருதுநகர் மாவட்​டம் ராஜ​பாளை​யம் உட்பட சில பகு​தி​களில் பூமிக்கு அடி​யில் தங்​கம் இருப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் உள்​ளன. மேலும், தமிழகத்​தில் உள்ள கனிம வளங்​கள் குறித்து ஆய்வு செய்​த​போது செல்​போன் பேட்​டரிக்கு பயன்​படும் லித்​தி​யம் இருப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறுகள் அறியப்​பட்​டுள்​ளன. அதுகுறித்த தொடர் ஆய்​வு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.