ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலம்: அரைகுறை பணிகளும்… அவதிப்படும் மக்களும்..!

ஒத்​தி​வாக்​கம் ரயில்வே மேம்​பால கட்​டு​மானப் பணி ஆமைவேகத்​தில் நடை​பெற்று வரும் நிலை​யில் பாதை​யும் அடைக்​கப்​பட்​ட​தால் மக்​கள் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அனைத்து பணி​களையும் விரைந்து முடித்து மக்​கள் பயன்​பாட்டுக்கு கொண்​டுவர வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது.

செங்​கல்​பட்டு அடுத்த ஒத்​தி​வாக்​கம்-பொன்​விளைந்​தகளத்​தூர் இடையே, ரயில்வே கேட் உள்​ளது. இந்த பகுதி கிராம மக்​கள் பணி நிமித்​த​மாக​வும் பள்​ளி, கல்​லுாரி, அரசு மருத்​து​வ​மனை உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய தேவைக்​கு அரசு பேருந்​துகள் மற்​றும் பிற வாக​னங்​களில் செல்​கின்​றனர். அப்​போது, ரயில்வே கேட் கடந்து தான் செல்ல வேண்​டும். ரயில் போக்​கு​வரத்து அதி​கரித்து வரும் நிலை​யில், அடிக்​கடி ஒத்​தி​வாக்​கம் ரயில்வே கேட் மூடப்​படு​கிறது. இதனால் சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​வ​தால் மேம்​பாலம் கட்ட வேண்​டும் என கோரிக்கை எழுந்​தது.

இதைத்​தொடர்ந்து செங்​கல்​பட்டு – ஒத்​தி​வாக்​கம் ரயில் நிலை​யங்​களுக்கு இடையே, 2011-12-ம் ஆண்டு ரூ.30 கோடியே 40 லட்​சம் மதிப்​பில் மேம்​பாலம் கட்ட நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. ரயில்வே நிர்​வாகம் கடந்த ஏழு ஆண்​டு​களுக்கு முன்பு தண்​ட​வாள பகு​தி​யில் மேம்​பால பணியை முடித்​தது. ஆனால், மாநில நெடுஞ்​சாலைத் துறை​யினர் மேம்​பாலம் அமைக்​கும் பணியை தொடங்​காமல் இருந்​தனர்.

இதனிடையே கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், மேம்​பால பணிக்கு ரூ.26 கோடியே 58 லட்​சம் டெண்​டர் விடப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, ரயில்வே மேம்​பால பணி கடந்த 2023 மார்ச் 12-ம் தேதி தொடங்​கப்​பட்டு பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மேம்பாலப் பணி​கள் விறு​விறுப்​பாக தொடங்கி தற்​போது ஆமை வேகத்​தில் நடை​பெறுகின்​றன. விரைந்து முடிக்க வேண்​டும் என வாகன ஓட்​டிகள் மற்​றும் கிராம மக்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

செல்​வகு​மார்

இதுகுறித்து பொன்​விளைந்​தகளத்​தூர் பகு​தி​யை சேர்ந்த செல்​வகு​மார் என்​பவர் கூறியது: ஒத்​தி​வாக்​கம் ரயில்வே மேம்​பால பணி, கடந்த இரண்டு ஆண்​டு​களாக ஆமை வேகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. மேம்​பால பணி 60 சதவீதத்​துக்​கு மேல் முடிந்​துள்​ளது. இவ்​வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள், கிராம மக்​கள் குறித்த நேரத்​துக்கு பணி, பள்​ளி, மருத்​து​வ​மனை உள்​ளிட்​ட​வற்​றுக்கு செல்ல முடி​யாமல் தவிக்​கின்​றனர்.

இந்நிலையில், பத்து பேர் மட்​டுமே பணி புரி​யும் நிலை​யில் பணி​கள் முடிக்​கப்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. பணி ஒப்​பந்த காலம் முடிந்து நான்கு மாதங்​கள் கடந்த நிலை​யிலும் ஒப்​பந்​தம் பெற்ற நிறு​வனம் பணி​யை விரைந்து முடிக்க ஆர்​வம் காட்​டாத​தால் இந்த வழி​யாகச் செல்​லும் பொது​மக்​கள் பல இன்​னல்​களுக்கு ஆளாகி​யுள்​ளனர்.

ஒத்​தி​வாக்​கம் ரயில்வே கேட்டை கடந்து பொன்​விளைந்த களத்​தூர், பொன்​ப​தர் கூடம், வீரகுப்​பம், வேண்​பாக்​கம், புன்​னப்​பட்​டு, ஆனூர், வல்​லிபுரம், ஈசூர், எலுமிச்​சம்​பட்​டு, தச்​சூர், பூதூர் உள்​ளிட்ட 50-க்​கும் மேற்​பட்ட கிராம மக்​கள் செல்ல வேண்​டிய நிலை​யில் மேம்​பால பணியை காரணம் காட்டி ரயில்வே கேட் குறுக்கே பொது​மக்​கள் கடந்து செல்​லாத வகை​யில் சுவர் எழுப்​பப்​பட்​டுள்​ளது. இரண்டு மற்​றும் மூன்று சக்கர வாக​னங்​கள் கூட அனு​ம​திக்​கப்​ப​டாத​தால் பல கிலோமீட்​டர் சுற்​றிவர வேண்​டிய நிலை உள்​ளது.

அவ்​வாறு பொன்​விளைந்த களத்​தூர்- உதயம்​பாக்​கம் வழி​யாக உள்ள ரயில்வே கேட்டை கடந்து பொது​மக்​கள் செல்ல நேரிடு​கிறது. அந்​த சாலை சுமார் 15 அடி அகலமே உள்​ள​தால் ஒரு வாக​னம் மட்​டுமே செல்ல முடி​யும். ஆனால் காலை மற்​றும் மாலை நேரத்​தில் அதி​கரிக்​கும் வாக​னங்​களால் நெரிசலும் சிரம​மும் ஏற்​படு​கிறது. சில நேரங்​களில் வாக​னங்​களில் செல்வோருக்கு வயல்​களில் விழுந்து சிறு சிறு காயங்​களும் பொது​மக்​களுக்கு ஏற்​படு​கி​றது.

இன்​னும் ஒரு மாதத்​தில் ஒத்​தி​வாக்​கம் புதுப்​பாக்​கம் திரு​வானைக்​கோ​வில் உள்​ளிட்ட பகு​தி​களில் ஆயிரக்​கணக்​கான ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டுள்ள நெற்​ப​யிர்​கள் அறு​வடைக்கு தயா​ராக உள்ள நிலை​யில் அறு​வடை செய்​யும் பட்​சத்​தில் பொன்​விளைந்த களத்​தூர் பகு​தி​யில் அமைக்​கப்​படும் நெல் கொள்​முதல் நிலை​யத்​துக்கு அறு​வடை நெல்லை கொண்டு செல்​வ​தில் சிரமம் ஏற்​பட்​டுள்​ளது. இதற்​காக ஆயிரம் ரூபாய் வரை டிராக்​டருக்கு சுமை கூலி கொடுத்து சுற்​றிவர வேண்​டிய நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே, ஒப்​பந்​தம் பெற்ற நிறு​வனம் அலட்​சி​ய​மாக மெத்​தனப்​போக்​கில் குறை​வான பணி​யாளர்​களைக் கொண்டு வேலை செய்வ​தால் பணி​களை முடிக்க இன்​னும் பல மாதங்​கள் ஆகும். ஏற்​கெனவே ஒப்​பந்த காலம் முடிந்து 4 மாதம் கடந்​து​விட்​டநிலை​யில், மேலும் கால​தாமதம் செய்​யும் ஒவ்​வொரு நாளும் மக்​களுக்கு கடும் சிரமத்தை தரும். எனவே பாலப்​ பணி​களை விரைந்​து முடிக்​க நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​வாறு கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.