`என்னை அச்சுறுத்துகிறார்கள்; எமோஷனலாக உடைந்துவிட்டேன்' – தங்க கடத்தல் வழக்கு குறித்து ரன்யா ராவ்

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையான ரன்யா ராவ், தங்கக் கடத்தல் வழக்கில், வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். தொடையில் ஒட்டி வைத்து தங்கக் கட்டிகளை அவர் கடத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதுவரை நடிகை ரன்யாவிடமிருந்து மொத்தம் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரன்யா ராவ்

பெங்களுரு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வாதம் செய்திருக்கிறார். “நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் இந்தக் கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். ஒரு பெண்ணாக இருந்தும் என்னை தூங்கவோ, ஓய்வெடுக்கவோ விடமாட்டோம் என்கிறார்கள்.

ரன்யா ராவ்

வார்த்தைகளால் என்னைக் கொடுமைப்படுத்தி அச்சுறுத்துகிறார்கள். எமோஷனலாக நான் உடைந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த தங்கக்கடத்தல் வழக்கில் நடிகை ரன்யாவுடன் கூட்டாளிகளாக இருந்ததாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், கர்நாடகா அமைச்சர்கள் எனப் பலரது பெயர்களும் அடிபடுவதால் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.