நகரச் செய​லா​ளர் பதவிக்கு ரூ.15 லட்​சம் பேரம்! – விழுப்​புரம் மாவட்ட தவெக செய​லா​ளர் மீது தடாலடி புகார்

விழுப்​புரத்​தில் மகளிர் தினத்தை முன்​னிட்டு கடந்த 8-ம் தேதி நல உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்​சியை தவெக பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் தலை​மை​யில் ஏற்​பாடு செய்​திருந்​தார்​கள். இதை வைத்து விழுப்​புரம் தவெக-வுக்​குள் இப்​போது ஏகப்​பட்ட களேபரங்​கள் வெடித்​துள்​ளன. இந்த நிகழ்ச்​சிக்​காக வந்த புஸ்ஸி ஆனந்தை வரவேற்​ப​தற்​காக, திமுக-​விலிருந்து வந்த ‘கில்​லி’ சுகர்ணா மாற்​றுக் கட்​சிகளில் இருந்து தவெக-​வில் இணைய வந்​திருந்த சுமார் 500 பேரை காந்தி சிலை அருகே திரட்டி இருந்​தார்.

இவருக்​கும் விழுப்​புரம் (தொகு​தி) மாவட்​டச் செய​லா​ள​ரான ‘குஷி’ மோகன் என்ற மோகன்​ராஜுக்​கும் அவ்​வள​வாய் ஒத்​துப்​போக​வில்லை என்​கி​றார்​கள். இதனால், சென்​னையி​லிருந்து வந்த புஸ்ஸி ஆனந்தை பாதி வழி​யிலேயே மடக்​கிய ‘குஷி’ மோகன், அவரை தனது பைக்​கில் ஏற்றி குறுக்கு வழி​யில் நிகழ்ச்சி நடந்த இடத்​துக்கு அழைத்​துச் சென்​று​விட்​டா​ராம்.

இதனால் ஏமாற்​றமடைந்த சுகர்​ணா​வும் அவரது ஆதர​வாளர்​களும் நிகழ்ச்சி நடந்த இடத்​துக்கு லேட்​டாக போய்ச் சேர்ந்​திருக்​கி​றார்​கள். அதற்​குள்​ளாக நிகழ்ச்சி தொடங்​கி​விட்​ட​தாகச் சொல்​லப்​படு​கிறது. இதனால், திட்​ட​மிட்டு தன்னை புறக்​கணித்த ‘குஷி’ மோக​னுக்கு ஆதர​வாக புஸ்ஸி ஆனந்​தும் இருப்​ப​தாக இப்​போது புயலைக் கிளப்​பிக் கொண்​டிருக்​கி​றார் ‘கில்​லி’ சுகர்​ணா.

இது தொடர்​பாக நம்​மிடம் ஆதங்​கத்​தைக் கொட்​டிய அவர், “தி​முக-​வில் ஐந்​தாண்டு காலம் ‘கில்​லி’ சுகர்ணா என்ற பெயரிலேயே நகர்​மன்ற உறுப்​பின​ராக இருந்த நான், விஜய் கட்சி தொடங்​கியதும் தவெக-வுக்கு வந்​து​விட்​டேன். ஆனால், மக்​கள் மத்​தி​யில் செல்​வாக்கு பெற்​றுள்ள நான் தனக்கு போட்​டி​யாக வந்​து​ விடு​வேனோ என அஞ்சி சதி செய்​கி​றார் ‘குஷி’ மோகன். என்​னைக் கட்​சியி​லிருந்து நீக்​கி​விட்​ட​தாக மோகன் வாட்ஸ் அப் குழு​வில் பதி​விடு​கி​றார். அவருக்கு அந்த அதி​காரத்​தைக் கொடுத்​தது யார்? இவரின் செயல்​களுக்கு பின்​னால் பொதுச்​செய​லா​ள​ரும் உள்​ள​தாக சந்​தேகிக்​கிறேன்.

காந்தி சிலை அருகே காத்திருந்த சுகர்ணா அணி…

15 லட்ச ரூபாய் கொடுத்​தால் விழுப்​புரம் நகரச் செய​லா​ளர் பதவி தரு​வ​தாக எனது நண்​பர் மூல​மாக என்​னிடம் பேரம் பேசி​னார் மோகன். இதை புஸ்ஸி ஆனந்​திடம் தெரி​வித்​தேன். ஆனால், அவர் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. மாவட்​டத்​தில் புதி​தாக பொறுப்பு அறிவிக்​கப்​பட்​ட​வர்​களில் மோக​னின் உறவினர்​கள் மட்​டுமே 7 பேர் இருக்​கி​றார்​கள்.

‘மாற்​றுக் கட்​சியி​லிருந்து வருபவர்​கள் உங்​களைக் காலி செய்​து​விடு​வார்​கள்’ என்று பொது​வெளி​யில் ரசிகர் மன்​றத்​தினரை அச்​சுறுத்​துகி​றார் மோகன். அதற்கு பேசாமல், மற்ற கட்​சிகளி​லிருந்து யாரும் இங்கு வரா​தீர்​கள் என்று சொல்​லி​விட்​டுப் போகலாமே. தவெக-வுக்கு வாக்​களிக்க மக்​கள் தயா​ராய் இருக்​கி​றார்​கள். ஆனால், தவெக அரசி​யல் கட்​சி​யாக மாறாமல் இன்​ன​மும் ஒரு மன்​ற​மாகவே இருக்​கிறது” என்​றார்.

இதற்​கெல்​லாம் என்ன பதில் சொல்​கிறீர்​கள் என ‘குஷி’ மோக​னிடம் கேட்​டதற்​கு, “நிகழ்ச்​சிக்கு மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்​டுமே காவல்​துறை அனு​மதி அளித்​திருந்​தது. ஆனால், பொதுச் செய​லா​ளர் விழுப்​புரம் நகருக்​குள் வரும்​போதே இரவு 9.20 ஆகி​விட்​டது. அதனால் விரை​வில் அவரை மேடையேற்​றவேண்​டும் என்​ப​தால் பைக்​கில் அழைத்​துச் சென்​றேன். இதில் எவ்​வித உள் நோக்​க​மும் கிடை​யாது. சுகர்ணா தரப்​பினர் காந்தி சிலை​யி​லிருந்து பேரணி​யாகச் செல்ல திட்​ட​மிருந்​தனர். அதற்கு போலீஸ் அனு​மதி இல்​லை.

அவர் கூட்​டி​யிருந்த கூட்​டம் பணம் கொடுத்து கூட்​டியது. நகரச் செய​லா​ளர் பதவிக்கு நான் பணம் கேட்​ட​தாகச் சொல்​வ​தில் துளி​யும் உண்மை இல்​லை. பிற கட்​சிகளி​லிருந்து வந்​தவர்​களுக்​கும் கட்​சி​யில் பொறுப்​பு​கள் அளிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார். ‘குஷி’​யும் ‘கில்​லி’​யும் இப்​படி குஸ்தி போட்​டுக் கொண்​டிருக்க, அந்த நிகழ்​சி​யில் பேசிய புஸ்ஸி ஆனந்​தோ, “யாரெல்​லாம் தலை​வ​ருக்​காக உழைத்​தார்​களோ அவர்​களுக்கு மட்​டும்​தான் பதவி வழங்​கப்​படும்.

மாற்​றுக் கட்​சிகளி​லிருந்து கார், ஹெலி​காப்​டரில் வந்​தா​லும் சரி, சைக்​கிளில் சென்று தலை​வ​ருக்​காக போஸ்​டர் ஒட்​டி, கொடி கட்டி உழைத்​தவர்​களுக்கே பதவி வழங்​கப்​படும். இது தலை​வரின் உத்​தரவு” என்று தன் பங்​கிற்கு கொளுத்​திப் போட்​டு​விட்​டுப் போயிருக்​கிறார்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.