ரிசர்வ் வங்கிக்கு டிஜிட்டல் பரிமாற்ற விருது: பிரதமர் மோடி பாராட்டு

புதுடெல்லி,

லண்டன் மத்திய வங்கியின் டிஜிட்டல் பரிமாற்ற விருதுக்கு இந்திய ரிசர்வ் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதை ரிசர்வ் வங்கி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளது.

அதன்படி, ‘இந்திய ரிசர்வ் வங்கிக்குழுவால் உருவாக்கப்பட்ட பிரவாஹ் மற்றும் சார்த்தி அமைப்புகள் உள்ளிட்ட அதன் முன்முயற்சிகளுக்காக விருதும், அங்கீகாரமும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் முயற்சிகள் காகித பயன்பாட்டைக் குறைத்து, ரிசர்வ் வங்கியின் உள் மற்றும் வெளிப்புற செயல்முறைகளை மாற்றியிருப்பதை விருது குழு பாராட்டி உள்ளது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. ரிசர்வ் வங்கிக்கு விருது வழங்கப்படுவதை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘நிர்வாகத்தில் புதுமை மற்றும் செயல்திறன் மீதான முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் ஒரு பாராட்டத்தக்க சாதனை. டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவின் நிதி சூழல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எண்ணற்ற உயிர்களை மேம்படுத்துகின்றன’ என கூறியிருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.