ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை, கதவணை நீர் நிலையம் அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக கடந்த 13-ஆம் தேதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த சடலத்தை போலீஸார் மீட்டபோது, வயிறு மற்றும் நெஞ்சுப் பகுதி பிளக்கப்பட்டு அதில், கற்கள் வைத்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த நபர் கொலை செய்யப்பட்டு, வாகனத்தில் கொண்டு வீசப்பட்டிருக்கலாம் என பவானி போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டது பவானி தொட்டிபாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் மதியழகன் (30) எனத் தெரியவந்தது. ஓட்டுநராக வேலை செய்து வந்த மதியழகனும், பவானி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜோதி மகள் கிருத்திகாவைக் (26) காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடி அடிமையான மதியழகனின் கொடுமையால், கிருத்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மதியழகனின் தாய், கிருத்திகாவின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில், இத்துணிகர கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மதியழகனின் தாய் சுதா (54), சகோதரர் முருகானந்தம் (28), மதியழகனின் நண்பரான பவானி வர்ணபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கௌரிசங்கர் (24), கிருத்திகாவின் சகோதரர் யோகேஷ் (26), இவரது அத்தை மகன் சண்முகம் மகன் சக்திபாண்டி (32) என்பது தெரியவந்தது.
குடிப்பழக்கமும், ரவுடித்தனம் செய்து வந்த மதியழகன் தனது மனைவி கிருத்திகாவின் தற்கொலைக்குப் பின்னர் தாய் சுதா, சகோதரர் முருகானந்தத்தை அடித்தும் அறிவாளால் வெட்டியும், பணம் கேட்டும் நாள்தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், வெறுப்படைந்த சுதா, இதுகுறித்து கிருத்திகாவின் சகோதரரிடமும், நண்பரிடமும் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, சங்ககிரியில் நடைபெற்ற கொலை வழக்கில், தன்னையும் சிக்க வைத்ததால் மதியழகன் மீது கௌரிசங்கரும் கோபத்தில் இருந்து வந்தார்.

தனது தங்கையின் மரணத்துக்கு காரணமான மதியழகன் மீது கடும் கோபத்தில் இருந்த யோகேஷ், தனது உறவினரான சக்தி பாண்டியிடம் புலம்பி வந்துள்ளார். இதனால், இவர்கள் மதிழகனைப் பழிவாங்க முடிவு செய்தனர். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதி இரவு தொட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் போதையில் தகராறு செய்த மதியழகனை, தாய் சுதா, மகன் மகன் முருகானந்தம் மற்றும் யோகேஷ், சக்தி பாண்டி ஆகியோர் கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். பின்னர், தண்ணீருக்கு மேல் சடலம் வராத வகையில் வயிற்றை கிழித்தும், மார்பை பிளந்தும் கற்களை வைத்து கட்டி, ஆம்னி காரில் எடுத்துச் சென்று காவிரி ஆற்றில் ஜல்லிக்கல்மேடு பகுதியில் வீசிவிட்டு அவரவர் வீட்டுக்குச் சென்று விட்டனர். பவானி, மூன்ரோடு பகுதியில் சுதா கோழிக்கடை நடத்தி வருவதால், அருகாமையில் உள்ள ஜல்லிக்கல்மேட்டுக்கு அடிக்கடி கோழிக் கழிவுகளை கொட்டச் செல்வது வழக்கம். அதேபோன்று மதியழகன் உடலையும் அப்பகுதிக்கு சென்று வீசி வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks