மியாமி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெலாரசின் அரினா சபலென்கா, பல்கேரியாவின் விக்டோரியா டோமோவா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த வீராங்கனையான அரினா சபலென்கா 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் விக்டோரியா டோமோவாவை வீழ்த்தி 3வது சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 32) முன்னேறினார். வரும் 23ம் தேதி நடைபெறும் 3வது சுற்று ஆட்டத்தில் சபலென்கா, ருமேனியாவின் எலெனா-கேப்ரியேலா ரூஸ் உடன் மோத உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.