ஏப்.10, 12-ல் 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்​ரல் – கூடூர் மார்க்​கத்​தில், பொன்​னேரி – கவரைப்​பேட்டை இடையே பொறி​யியல் பணி நடக்க உள்​ள​தால், ஏப்​ரல் 10, 12-ம் தேதி​களில் 20 மின்​சார ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் செய்​யப்பட உள்​ளது.

அதன் விவரம்: ஏப்​ரல் 10, 12-ம் தேதி​களில் சென்னை சென்ட்​ரல் – சூலூர்​பேட்டை காலை 10.15, நண்​பகல் 12.10, மதி​யம் 1.05 மணி மின்​சார ரயில்​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. அதே​போல, சென்ட்​ரல் – கும்​மிடிப்​பூண்டி காலை 10.30, முற்​பகல் 11.35 மணி ரயில்​களும், கடற்​கரை – கும்​மிடிப்​பூண்டி காலை 9.40, நண்​பகல் 12.40 மணி ரயில்​களும் ரத்து செய்​யப்பட உள்​ளன.

கும்​மிடிப்​பூண்டி – கடற்​கரை காலை 10.55, பிற்​பகல் 2.30, 3.15 மணி ரயில்​கள், சூலூர்​பேட்டை – நெல்​லூர் பிற்​பகல் 3.50 மணி ரயில், நெல்​லூர் -சூலூர்​பேட்டை மாலை 6.45 மணி ரயில், கும்​மிடிப்​பூண்டி – சென்ட்​ரல் மதி​யம் 1.00 மணி ரயில் சூலூர்​பேட்டை – சென்ட்​ரல் பிற்​பகல் 11.45, மதி​யம் 1.15, பிற்​பகல் 3.10, இரவு 9.00 மணி ரயில் ஆகிய​வை​யும் ரத்து செய்​யப்​படு​கின்​றன.

இதற்கு பதிலாக, சென்ட்​ரலில் இருந்து பொன்​னேரி, மீஞ்​சூர் இடையே பாசஞ்​சர் சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்​திக்​குறிப்​பில்​ தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.