பிரதமர் மோடி தொகுதி வாராணசியின் ஆட்சியர் ராஜலிங்கத்துக்கு மண்டல ஆணையராக பதவி உயர்வு

புதுடெல்லி: தமிழகத்​தின் தென்​காசி மாவட்ட கடையநல்​லூரை சேர்ந்த சுப்​பையா – மலை​யம்​மாள் தம்​ப​தி​யின் மூத்த மகன் எஸ்​.​ராஜலிங்​கம். திருச்சி என்​ஐடி.​யில் வேதி​யல் பிரி​வில் 2003-ல் பட்​டம் பெற்​றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.​யின் அலிகரில் பணியை தொடங்​கி​னார். பின்​னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரி​விலேயே பணி​யில் சேர்ந்​தார். ஐஏஎஸ் பணி​யில் அவுரய்​யா, சோன்​பத்​ரா, குஷி நகர் மற்​றும் சுல்​தான்​பூர் ஆகிய மாவட்​டங்​களில் ஆட்​சி​ய​ராக பணி​யாற்​றி​னார்.

கடந்த நவம்​பர் 2022-ல் வாராணசி​யின் 58-வது ஆட்​சி​ய​ராக ராஜலிங்​கத்தை முதல்​வர் ஆதித்​ய​நாத் நியமித்​தார். இந்த மாவட்​டத்​தில் ஆட்​சி​ய​ராக நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்​டரை ஆண்டு வாராணசி நிர்​வாகத்​தில் 3 காசி தமிழ்ச் சங்​கமங்​கள் நிகழ்ச்​சிகள் நடை​பெற்​றன. பிரதமர் உத்​தர​வின் பேரில் பல கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை​யும் ராஜலிங்​கம் அமல்​படுத்​தி​னார். இதனால், பிரதமர் மோடி​யின் அபி​மானத்தை பெற்​றார். பின்​னர் பிரதமர் மோடி நேரடி​யாக​வும் வீடியோ கான்​பரன்​சிங் கூட்​டங்​களி​லும், ‘மிஸ்​டர் ராஜலிங்​கம்’ என்று பெயரைக் குறிப்​பிட்டு அழைக்​கும் அளவுக்கு நம்​பிக்​கைக்கு உரிய​வ​ராக செயல்​பட்​டார்.

இந்​நிலை​யில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டது. எனினும், மகா கும்​பமேளா, பல கோடி பக்​தர்​கள் வரு​கை, காசி தமிழ்ச் சங்​கமம் 3.0 நிகழ்ச்சி உள்​ளிட்ட முக்​கிய பணி​கள் இருந்​த​தால் ராஜலிங்​கத்​துக்கு பதவி உயர்​வுக்​கான பணி ஒதுக்​கப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், அந்​தப் பணி​களை அவர் சிறப்​பாக செய்து முடித்​த​தால், தற்​போது அவர் வாராணசி​யிலேயே மண்டல ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். வாராணசி மண்​டலத்​தின் 4 மாவட்ட ஆட்​சி​யர்​களின் பணி​களை மேற்​பார்​வை​யிடும் இந்த ஆணை​யர் பணி​யில் நியமிக்​கப்​பட்ட முதல் தமிழரும் இவர்​தான்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்​கம் கூறும்​போது, ‘‘பு​திய பணி​யில், முக்​கிய​மாக வாராணசி​யில் அமலாக்​கிய ரூ.49,000 கோடி மதிப்​பிலான வளர்ச்​சித் திட்​டங்​களை கண்​காணிக்​கும் பணி​யும் அடங்​கி​யுள்​ளது. அத்​துடன் வாராணசி வளர்ச்​சிக் கழகத்​தின் தலை​வர் என்ற கூடு​தல் பணி​யும் உள்​ளது. இந்த பதவி​யில், மண்​டலத்​தின் நகரங்​களை விரிவடைய செய்​வது, வாராணசி போக்​கு​வரத்தை அடுத்​தக்​கட்​டத்​துக்கு கொண்டு செல்​வது, நகரின் திடக்​கழிவு மேலாண்மை உள்​ளிட்ட பல பணி​களை செய்ய திட்​ட​மிட்​டுள்​ளேன். காசி விஸ்​வ​நாதர் கோயில் அறக்​கட்​டளை தலை​வ​ராக பக்​தர்​களுக்​கான வசதி​களை மேம்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளேன். அதன் ஆலோ​சனை​களை​யும் வரவேற்​கிறேன்’’ என்​றார். ராஜலிங்​கத்​துக்கு மனை​வி நித்​யா மற்​றும்​ மகன்​ வேலன்​ ஆகியோர்​ உள்​ளனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.