திருமணத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்த 5 லட்சம் பாகிஸ்தான் பெண்கள்: தீவிரவாதத்தின் புதுமுகம் என பாஜக எம்.பி. விமர்சனம்

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தானை சேர்ந்த 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பெண்​கள், திரு​மணத்​தின் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். இது​போன்ற தீவிர​வாதத்​தின் புது​முகத்தை எதிர்த்து எப்​படி போராட போகிறோம்​?’’ என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சித்​துள்​ளார்.

காஷ்மீரின் பஹல்​காமில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இதையடுத்​து, பாகிஸ்​தானியர்​களின் அனைத்து வித​மான விசாக்​களை​யும் மத்​திய அரசு ரத்து செய்​தது. அத்​துடன் இந்​தி​யாவை விட்டு வெளி​யேற உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், தீவிர​வாதத்​தின் புது​முக​மாக திரு​மணம் இருக்​கிறது என்று பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே விமர்​சனம் செய்​துள்​ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நிஷி​காந்த் கூறுகை​யில், ‘‘திரு​மணத்​தின் மூலம் மட்​டும் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பாகிஸ்​தான் பெண்​கள் இந்​தி​யா​வுக்​குள் வந்​துள்​ளனர். அவர்​களுக்கு இன்​னும் இந்​திய குடி​யுரிமை வழங்​கப்​பட​வில்​லை. இது​போல் திரு​மணம் மூலம் இந்​தி​யா​வுக்​குள் வரும் பாகிஸ்​தான் பெண்​களின் எண்​ணிக்கை அதி​கரிப்​பது, தீவிர​வாதத்​தின் புது​முக​மாக தெரி​கிறது. இதை எதிர்த்து நாம் எப்​படி போராட போகிறோம். இந்த விஷ​யம் மிக​வும் கவலை அளிக்​கிறது’’ என்று விமர்​சித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், அட்​டாரி எல்​லை​யில் இந்​திய அதிகாரி அருண்​பால் நேற்று கூறியதாவது:பாகிஸ்​தானியர்​களுக்கு வழங்​கப்​பட்ட தூதரக, நீண்ட கால, அலு​வல் ரீதியி​லான விசாக்​களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்​கள், குறுகிய கால விசாக்​கள் அனைத்​தை​யும் மத்​திய அரசு கடந்த 27-ம் தேதி ரத்து செய்​தது. அதன்​பின் கடந்த 3 நாட்​களில் மட்​டும் இந்​தி​யா​வில் இருந்து 537 பாகிஸ்​தானியர்​கள் வெளி​யேறி உள்​ளனர். அதே கால கட்​டத்​தில் பாகிஸ்​தானில் இருந்து இந்​தி​யர்​கள் 850 பேர் நாடு திரும்பி உள்​ளனர். கடந்த ஞாயிற்​றுக்​கிழமை மட்​டும் 237 பாகிஸ்​தானியர்​கள் இந்​தி​யா​வில் இருந்து வெளி​யேறினர். 116 இந்​தி​யர்​கள் நாடு திரும்​பி உள்​ளனர்​.இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.