திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தேர் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவான்மியூரில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி, இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் மாட வீதிகளில் உலா … Read more

‘பாரத் பந்த்’ தெலுங்கு நடிகர் சென்னையில் மரணம்

ஐதராபாத்: கோடி ராமகிருஷ்ணா தெலுங்கில் இயக்கி, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட ‘பாரத் பந்த்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் காஸ்ட்யூம் கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். தெலுங்கு நடிகரும், …

பாஜ ஆட்சி காலத்தில் அமலாக்கத்துறை ரெய்டு எண்ணிக்கை 2,555% அதிகரிப்பு

புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் அமலாக்கத்துறை ரெய்டுகளின் எண்ணிக்கை 2,555 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒன்றிய அரசின் கீழ் தன்னாட்சி விசாரணை அமைப்பாக செயல்படும் அமலாக்கத்துறை, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், பெமா மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம், தப்பியோடிய குற்றவாளிகள் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   கடந்த சில ஆண்டுகளாக அமலாக்க இயக்குனரகத்தின் அதிரடி சோதனைகளால், அன்னிய செலாவணி மேலாண்மைச் … Read more

மேட்டுப்பாளையம் அருகே பாக்குத்தோப்பில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து யானைகள் அட்டகாசம்

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட புளியமர தோப்பு பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் காட்டு யானை, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதுடன் மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் வாழை, பாக்கு உள்ளிட்டவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் புளியமரத்தோப்பு பகுதியை சேர்ந்த கோவர்த்தனன் என்பவர் தனது தோட்டத்தில் பாக்கு பயிரிட்டுள்ளார். நேற்று … Read more

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!..

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி  பெங்களூரு அணிக்கு 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.

சீசன் முடிந்ததால் வெறிச்: கோடியக்கரையில் கடல் சீற்றம்.! மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வேதாரண்யம்: கோடியக்கரையில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீசனும் முடிந்ததால் கோடியக்கரை வெறிச்சோடியது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடித்து வந்தனர். நாள்தோறும் பிடிக்கப்படும் மீன்வகைகளான காலா, ஷீலா, வாவல், இறால், நண்டு வகைகள் டன் கணக்கில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் … Read more

ஏழாயிரம்பண்ணையில் உள்ள பேருந்து நிலையத்தை முழுமையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்: பயணிகள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை: ஏழாயிரம்பண்ணை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் டூவீலர்களை நிறுத்திச்செல்வதால் இடவசதியின்றி பயணிகள் அவதிப்படுகின்றனர். மேலும், பேருந்து நிலையத்தை அடிப்படை வசதிகளுடன் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூரில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் உள்ளது ஏழாயிரம்பண்ணை. இந்தப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சாத்தூர் மற்றும் தாலுகா தலைநகரான வெம்பக்கோட்டையில் இருந்து இப்பகுதி வழியாக கோவில்பட்டி, ராஜபாளையம், சங்கரன்கோவில் உள்ளிட்ட … Read more

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

ஐதராபாத்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 204 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்தது. ஐதராபாத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் 54, ஜோஸ் பட்லர் 54, சஞ்சு சாம்சன் 55, ஹெட்மயர் 22 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நடராஜன், ஃபரூக் தலா 2 விக்கெட், உம்ரான் மாலிக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும் எலும்பிச்சை சாகுபடியில் இரட்டிப்பு லாபம்: கடவூர், தோகைமலை பகுதியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை: 4 ஆண்டுகளில் காய்ப்பு வந்து விடும், இரட்டிப்பு லாபம் கிடைப்பதால், கடவூர், தோகைமலை பகுதியில் எலும்பிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழர்கள் மத்தியில் திருமணங்கள்,மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் மற்றும் மருத்துவ குணங்கள், குளிர்பானங்கள் என்று தொன்று தொட்டு எலுமிச்சை பழங்களை பயன்படுத்தி வருவதால் இன்று தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இதனால் பொதுமக்களின் தினந்தோறும் பயன்படுத்தி வருவதால் இதன் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், எலும்பிச்சை சாகுபடியில் கூடுதல் லாபம் … Read more

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி!

பெங்களூரு: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 172 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 84 ரன்கள் எடுத்தார்.