இலங்கையில் அவசரநிலை பிரகடனம் ரத்து – அதிபர் கோத்தபய ராஜபக்சே திடீர் உத்தரவு..!!

கொழும்பு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கி வருகிறது. இந்த நெருக்கடியை முன்வைத்து இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அனைத்துக்கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே முடிவு செய்து, இதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். அரசில் இணைந்து மந்திரி பதவிகளை பெறுமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து … Read more

உக்ரைன் விவகாரம்: மக்களவையில் நாளை பதிலளிக்கிறார் ஜெய்சங்கர்

புதுடெல்லி, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதில் உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக லோக்சபா எம்.பி., பிரேம் சந்திரன், காங். எம்.பி. மணீஷ் திவாரி ஆகியோர் , அரசியலமைப்பு சட்டம் விதி 193-ன் கீழ் விவாதம் நடத்திட கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தின் மக்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாளை பதிலளிக்க … Read more

"தோனிக்கு ஜடேஜா தலைவலி கொடுக்கிறார் "- ஹர்பஜன் சிங் சாடல்

மும்பை, ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் மிகவும் பின்னடைவை சந்தித்து உள்ளது.    சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ஜடேஜாவிற்கு பொறுப்பு கிடைத்துவிட்டது. ஆனால் ஜடேஜா பீல்டிங் ரிங்கிற்கு வெளியில் நின்றுக்கொண்டிருக்கிறார். அங்கிருந்து … Read more

நெதர்லாந்து சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

ஆம்ஸ்டர்டாம்,  இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஐரோப்பாவின் துர்க்மேனிஸ்தான் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். துர்க்மேனிஸ்தான் பயணத்தை முடித்து கொண்ட அவர் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் வந்தடைந்தார். அவருக்கு நெதர்லாந்தின் மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் அரச முறைப்படி வரவேற்பு அளித்தனர். 1988-ம் ஆண்டு ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பயணம் செய்த பின்னர் 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இந்திய ஜனாதிபதி மீண்டும் நெதர்லாந்து சென்றுள்ளார்.

மாநிலங்களவையில் 200 தடவை குரல் வாக்கெடுப்பு நடந்த மசோதா

புதுடெல்லி,  மாநிலங்களவையில், பட்டய கணக்காளர், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மசோதா, 106 உட்பிரிவுகளை கொண்டது. ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒப்புதல் பெறும்வகையில், ஒவ்வொரு உட்பிரிவையும், அதற்கு உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களையும் குரல் வாக்கெடுப்புக்கு விட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மட்டும் திருத்தங்களுக்காக 163 நோட்டீஸ்கள் கொடுத்திருந்தார். பெரும்பாலான திருத்தங்களை அவர் முன்வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பினாய் விஸ்வமும் சில திருத்தங்களை கொண்டு வந்தார். … Read more

ஜாஸ் பட்லர் அரைசதம் : பெங்களூரு அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற  பெங்களூரு அணியின் கேப்டன் டூ பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன் படி தொடக்க வீரர்களாக ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால்  6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் டேவிட் வில்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதை தொடர்ந்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார். பட்லர் … Read more

இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி…!

கொழும்பு, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருக்கிறது. அன்னிய செலாவணி கையிருப்பு கரைந்ததால் பெட்ரோல்,டீசல், கியாஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்த நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், இலங்கை ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ந்து வருகிறது. டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே முதல் முறையாக ரூ.300-ஐ கடந்து விட்டது. அந்தவகையில் இலங்கை வர்த்தக வங்கிகளில் நேற்று டாலரின் மதிப்பு ரூ.310 ஆக இருந்தது. … Read more

மராட்டியத்தில் கட்டிடத்தொழிலாளி துப்பாக்கியால் சுட்டுக்கொலை

மும்பை, மராட்டியத்தின் நான்டெட் நகரில் கட்டிடத்தொழிலாளியான சஞ்சய் பியானி என்பவர் தன் வீட்டு வாசலில் இருந்து வீட்டிற்குள் செல்லும் போது, பைக்கில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இந்த கொலை சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  ​​தொப்பி அணிந்து கருப்பு உடை அணிந்த இருவர் கட்டிடத்தொழிலாளியை சரமாரியாக  சுட்டுக்கொலை செய்துள்ளனர்.  இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரிய வராத  நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு

லாகூர், ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியுள்ளன. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே ஒரு டி20 போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்க உள்ளது.

உக்ரைன்: புச்சா படுகொலைகளுக்கு ஐ.நா.வில் இந்தியா கடும் கண்டனம் – விசாரணைக்கும் ஆதரவு..!!

ஜெனிவா,  உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 41-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஒரு மாதத்தைக் கடந்தும் ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. குறிப்பாக தலைநகர் கீவ், கார்கிவ் ஆகிய நகரங்களைக் கைப்பற்ற ரஷிய ராணுவம் கடுமையாக தாக்குதல்களை நடத்தியது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.    இதற்கிடையே, உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், … Read more