ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இந்தியா வருகை

புதுடெல்லி , 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா வந்தார்.இருதரப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்  இந்த  அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று  இந்தியா  வந்தார் .இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. டெல்லி வந்த கிஷிடோவை  மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், உள்ளிட்டோர் வரவேற்றனர்  ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : மிதாலி ராஜ் புதிய சாதனை

ஆக்லாந்து, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற  18-வது லீக் ஆட்டத்தில்  ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதியது.ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.  278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி  49.3 ஓவர் முடிவில்  4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 280 ரன்கள் எடுத்து. 6 விக்கெட்டுகள் … Read more

உக்ரைன் மீது புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல்

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

ஹோலி கொண்டாட்டத்தில் விபரீதம்: போதையில் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்ட நபர் உயிரிழப்பு

போபால், ஹோலி பண்டிகையை வடமாநிலங்களில் நேற்றைய தினம் பொதுமக்கள் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி விளையாடி மகிழ்ந்தனர். இருப்பினும் இந்த பண்டிகையின் போது, ஒரு சில இடங்களில் எதிர்பாராத அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.  உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் ராஜஸ்தான் மாநிலம் பைகானீர் மாவட்டத்தில், இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 நபர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த நிலையில் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்..!

இண்டியன்வெல்ஸ், பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த உலகின் நம்பர் 6 வீராங்கனை இகா ஸ்வியாடெக் மற்றும் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலேப்புடன் மோதினார்.  1 மணிநேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் சிமோனாவை வீழ்த்தி முதல் முறையாக இண்டியன் வெல்ஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  மற்றொரு … Read more

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிப்பு..!

பிரேசிலியா, பிரேசிலின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளார். அக்டோபரில் நடைபெற இருக்கும் மறுதேர்தலுக்கு டெலிகிராமை ஒரு கருவியாக பயன்படுத்த நினைத்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு இந்த தடை அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெலிகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்தொடர்கின்றனர். இதுகுறித்து நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தன்னுடைய தீர்ப்பில், பிரேசில் அதிகாரிகளின் கோரிக்கைகளை டெலிகிராம் பலமுறை புறக்கணித்துள்ளது. குறிப்பாக சில … Read more

பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை: காங்கிரஸ்

பெங்களூரு,  கர்நாடகத்தில் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் நேற்று கூறியிருந்தார்.  பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறுகையில், “  குஜராத்தில் தொடக்க கல்வி பாடத்திட்டத்தில் பகவத்கீதை சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் கர்நாடகத்திலும் பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மேலும் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை … Read more

பெண்கள் உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா..!

ஆக்லாந்து, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸஃபாலி வெர்மா தலா 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா … Read more

புதின் பேச்சு பாதியிலேயே நிறுத்தம்; ரஷிய தொலைக்காட்சியால் பரபரப்பு

மாஸ்கோ,  உக்ரைன் மீது ரஷிய படைகள் 24 நாட்களாக தீவிர தாக்குதல் தொடுத்து வருகிறது.  ரஷியா கடந்த 2014ம் ஆண்டு கிரிமியாவை தனது நாட்டுடன் இணைத்தது மற்றும் உக்ரைனில் ரஷிய ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை ஆகியவற்றுக்கு ஆதரவாக ரஷிய அதிபர் புதின் நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். இதற்காக, அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார்.  லுஸ்னிகி மைதானத்தில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில், மைதானத்துக்கு உள்ளேயும், வெளியேயும் 2 … Read more

தேர்தல் தோல்விக்கு சோனியா காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது – ப.சிதம்பரம்

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நடந்த தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. இதனால் காங்கிரஸ் தலைமை குறித்து அக்கட்சியினரிடையே அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.  இதையடுத்து ஜி-23 என்று அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்கள் கட்சியை மறுசீரமைக்க கட்சியின் அமைப்பு தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதன் பிறகு நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் … Read more