கர்நாடகத்தில் மதரசாக்களுக்கு தடை விதிக்க வேண்டும்- ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

பெங்களூரு,  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளரும், பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான ரேணுகாச்சார்யா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் மதரசாக்களில் நமது தொலைநோக்கு பார்வை குறித்த கொள்கைகள், நமது நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த தலைவர்கள் குறித்து கற்பிப்பது இல்லை. அவர்கள் இஸ்லாமிய கொள்கைகளை மட்டுமே கற்பிக்கிறார்கள். சமூக விரோத செயல்கள் குறித்து கற்பிக்கிறார்கள். இது அங்கு படிக்கும் அப்பாவி குழந்தைகளின் மனதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் மதரசாக்களுக்கு தடை விதிக்க வேண்டும். அரசு … Read more

ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில்  நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ஸ்அணி முதலில் விளையாடி வருகிறது

பாகிஸ்தான்: பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்து – 7 பேர் பலி

லாகூர், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் மர்டன் மாவட்டத்தில் இருந்து கால்கொட் நகர் நோக்கி இன்று ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் 20-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். வேன் உப்பர் டீர் மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது செங்குத்தான வளைவில் திரும்ப முயற்சித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10 பேர் … Read more

கேரளாவில் இன்று 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, கேரளாவில் இன்று 346 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 31 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 471 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 59 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் … Read more

"பும்ரா என்ன செய்துவிட போகிறார் என கோலி கூறினார்"- முன்னாள் கிரிக்கெட் வீரரின் பேச்சால் பரபரப்பு

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் பட்டேல். இவர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு , மும்பை உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ளார். 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூரு அணிக்காக விளையாடினர். அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்  அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். இந்த நிலையில் ஆர்சிபி அணியில் ஜஸ்பிரித் பும்ரா முன்பே வாங்கப்பட்டிருப்பார் என்றும் கோலி தான் மறுத்துவிட்டார் என்றும் பார்த்தீவ் … Read more

மெக்சிகோவில் 19 பேர் சுட்டு கொலை

மிச்சோவாகன், மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல், எரிபொருள் திருடுவது உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.  இந்த போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதி கொள்வதும் உண்டு. சட்டவிரோத போதை பொருள் கடத்தல் கும்பல் மோதலால் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை, 3.4 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.  இவற்றில் பலர் குற்றவாளிகளாக உள்ளனர் என்றும் அவர்களுக்கு இடையேயான சண்டையில் கொல்லப்பட்டவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவிக்கிறது. … Read more

சத்தீஷ்காரில் சரக்கு ரெயில் விபத்து; 7 பெட்டிகள் தடம் புரண்டன

ராய்கார், சத்தீஷ்காரின் ராய்கார் மாவட்டத்தில் ஜாம்காவன் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தபோது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரெயிலின் என்ஜின் உள்பட 7 பெட்டிகள் தடம் புரண்டன.  எனினும், காயமடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

முதல் போட்டியில் டக் அவுட்டான இளம் வீரர்..! ஆறுதல் தெரிவித்த கேப்டனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நடந்து முடிந்த 19-வயதுக்கு … Read more

அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் திட்டம் முறியடிப்பு: உக்ரைன் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷிய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தகவலை கீவ் போஸ்ட் என்ற உக்ரைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.   இது குறித்து கீவ் போஸ்ட் செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ரஷியாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய ராணுவ குழு ஸ்லோவேகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது. இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று … Read more

மேற்குவங்காளம்: 8 பேர் எரித்துக்கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் பீர்ப்ஹம் மாவட்டம் ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தை சேர்ந்த திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். வீட்டிற்கு வெளியே நின்று செல்போனின் பேசிக்கொண்டிருந்த பகது ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.  பகது ஷேக்கை அதேபகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பகது ஷேக் மற்றும் சோனா ஷேக் இருவருமே திரிணாமுல் … Read more