அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் திட்டம் முறியடிப்பு: உக்ரைன் தகவல்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்யும் ரஷிய சிறப்பு ஏஜென்சியின் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தகவலை கீவ் போஸ்ட் என்ற உக்ரைன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.   இது குறித்து கீவ் போஸ்ட் செய்தி நிறுவன டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ரஷியாவின் சிறப்பு ஏஜென்சி தலைமையிலான 25 பேர் அடங்கிய ராணுவ குழு ஸ்லோவேகியா- ஹங்கேரி எல்லையில் உக்ரைன் அதிகாரிகளால் பிடிபட்டுள்ளது. இந்தக் குழுவின் பிரதான நோக்கம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதே” என்று … Read more

மேற்குவங்காளம்: 8 பேர் எரித்துக்கொலை – வெளியான திடுக்கிடும் தகவல்

கொல்கத்தா, மேற்குவங்காள மாநிலம் பீர்ப்ஹம் மாவட்டம் ராம்பூர்கட் என்ற பகுதியில் உள்ள பக்டூய் என்ற கிராமத்தை சேர்ந்த திர்ணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பகது ஷேக் என்பவர் கடந்த திங்கட்கிழமை கொல்லப்பட்டார். வீட்டிற்கு வெளியே நின்று செல்போனின் பேசிக்கொண்டிருந்த பகது ஷேக் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.  பகது ஷேக்கை அதேபகுதியை சேர்ந்த சோனா ஷேக் என்பவரின் ஆதரவாளர்களே குண்டு வீசி கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பகது ஷேக் மற்றும் சோனா ஷேக் இருவருமே திரிணாமுல் … Read more

டு பிளெஸ்சிஸ் அதிரடி ஆட்டம்: பஞ்சாப் வெற்றிபெற 206 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெற்ற 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன்  டு பிளெஸ்சிசும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். அனுஜ் ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதையடுத்து … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர்- கூடுதல் ஆயுதங்கள் வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா 32-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மார்ச் 27, 6.33 PM உக்ரைனை ரஷியா இரண்டு துண்டாக பிரிக்கலாம் – உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை மார்ச் 27, 12.30 PM உக்ரைனில் உள்ள எண்ணெய் மற்றும் மற்றும் உணவு விநியோக அமைப்புகளை ரஷியா அழிக்கத்தொடங்கியிருப்பதாக உக்ரைன் உள்துறை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் உக்ரைன் எல்லையில்  ரஷியா கூடுதல் … Read more

தொடர் கொலைகள்; மேற்கு வங்காளத்தில் 355வது சட்டப்பிரிவை அமல்படுத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

ஹவுரா, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்புராட் நகரில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், கடந்த 24ந்தேதி அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர்.  அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை … Read more

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி: மதுரை அணி சாம்பியன்

கரூர்,  கரூர் டெக்சிட்டி கூடைப்பந்து கழகம் சார்பில் ஆண்களுக்கான 5-ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 25-ந் தேதி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. இதில் கரூர், திருச்சி, கோவை, சென்னை, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடைபெற்ற போட்டியில் மதுரை அணியும், கரூர் அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.  இறுதி போட்டியில் மதுரை அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் … Read more

சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: முக்கிய நகரங்களில் ஊரடங்கு அமல்

பெய்ஜிங், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒரே ஒரு நோயாளி கண்டறியப்பட்டாலும் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் தனிமை  முகாம்களுக்கு அனுப்பி கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியது சீன அரசு . சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. … Read more

ஜனாதிபதி பதவியா…? எனக்கு வேண்டாம்; மாயாவதி அறிவிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.  தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அக்கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்த சூழலில், அக்கட்சி தலைவர் மாயாவதி கூறும்போது, இந்த தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டு பொய்யான பிரசாரம் மேற்கொண்டது.  உ.பி.யில் பகுஜன் சமாஜ் ஆட்சிக்கு … Read more

அக்சர், லலித் அதிரடி : மும்பையை வீழ்த்தி டெல்லி அசத்தல் வெற்றி

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன், 2-வது லீக் ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர்.  இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா … Read more

எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் கொலை; அவசரநிலை பிறப்பிப்பு

சான் சால்வடார், எல் சால்வடார் நாட்டில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.  பல கொலைகார கும்பல்கள் மிரட்டல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதிபர் நயீப் புகெலே 2019ம் ஆண்டு பொறுப்பேற்றதும் திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார். எனினும், 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களில் 50க்கும் கூடுதலான மக்கள் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து சிறையில் உள்ள கொலைகார … Read more