எல் சால்வடார் நாட்டில் ஒரே நாளில் 62 பேர் கொலை; அவசரநிலை பிறப்பிப்பு

சான் சால்வடார், எல் சால்வடார் நாட்டில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.  பல கொலைகார கும்பல்கள் மிரட்டல், போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. அதிபர் நயீப் புகெலே 2019ம் ஆண்டு பொறுப்பேற்றதும் திட்டமிட்ட குற்ற செயல்களை ஒழிப்பேன் என்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்றும் உறுதி கூறினார். எனினும், 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று காலத்தில் 3 நாட்களில் 50க்கும் கூடுதலான மக்கள் கொல்லப்பட்டனர்.  இதனை தொடர்ந்து சிறையில் உள்ள கொலைகார … Read more

நாட்டின் முன்னணி மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர், ஐநாக்ஸ் இணையவுள்ளதாக அறிவிப்பு

புதுடெல்லி, நாட்டின் மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்கு நிறுவனங்களான பிவிஆர் லிமிலெட் மற்றும் ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனங்களின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருங்கிணைந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அஜய் பிஜிலியும், செயல் இயக்குநராக சஞ்சீவ் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இரு நிறுவனங்கள் இணைந்த நிலையில், தற்போது இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. … Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா? – மிதாலிராஜ் விளக்கம்

கிரிஸ்ட்சர்ச், இந்திய பெண்கள் அணி உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தோல்வியை தழுவி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த நிலையில், போட்டி முடிந்த பின்னர் இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலிராஜ், மெய்நிகர் வீடியோவில் போட்டியளித்தார். அப்போது ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,  நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறுவோம் என்று நினைத்தோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அது நடக்கவில்லை. அரையிறுதிக்கு தகுதிபெற … Read more

நேபாள அதிபர் – சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

காத்மண்டு, சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யீ இன்று நேபாள நாட்டிற்கு சென்றார். நேபாள அதிபர் பித்யதேவியை சீன வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் உறவை மேம்படுத்துவது, வர்த்தகம் உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.   இதற்கிடையில், சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவுக்கும் பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ராணுவத்தின் 2 ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி, இந்திய ராணுவத்தின் நடுத்தர ரக நிலப்பரப்பில் இருந்து வானில் சென்று தாக்கி அழிக்கும் 2 ஏவுகணைகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் இன்று விண்ணில் ஏவி பரிசோதனை செய்தது. ஒடிசா கடற்கரையோரம் சந்திப்பூர் நகரில் ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில், இந்த அதிவிரைவு வான்வழி இலக்குகளை தாக்கி அழிக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இவற்றில் முதல் பரிசோதனையில், நடுத்தர உயரத்தில், அதேநேரத்தில் நீண்ட தொலைவு செல்ல கூடிய பொருளை, ஏவுகணை நடுவானில் தாக்கி அழித்தது.  2வது பரிசோதனையில், … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டாவதாக நடைபெறும் 3 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடி வருகிறது. 

உக்ரைனை இரண்டு துண்டாக பிரிக்க ரஷியா திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.   ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தொடர்ந்து உக்ரைன் ஆயுத உதவிகளை பெற்று போரிட்டு வருகிறது. … Read more

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி இருந்தன.  எனினும், சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் சர்வதேச விமான சேவையும் அடங்கும். இந்த நிலையில், கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அலுவலக அல்லது வர்த்தகம் சார்ந்த மற்றும் வெளிநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமான பயணிகளுக்கு … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது.  2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி … Read more

#லைவ் அப்டேட்ஸ்:உக்ரைனில் மேலும் ஒரு நகரை ரஷிய படைகள் கைப்பற்றியதாக தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மார்ச் 26,  3.00 p.m உக்ரைன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷிய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் மந்திரிகளை ஜோ பைடன் சந்திப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.  மார்ச் 26,  01.20 p.m துருக்கி … Read more