மணிப்பூரில் 5 பயங்கரவாதிகள் கைது

இம்பால், மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது. இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர் மற்றும் … Read more

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்

கராச்சி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் இன்று (19-02-2025) முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. இதில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தரவரிசையில் டாப்-8 இடங்களை பிடித்த அணிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன. அந்த வகையில் முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இந்த முறை தகுதி பெறவில்லை. … Read more

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை… புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி சட்டவிரோதமாக தங்கி இருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் ‘சி-17’ ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 4-ம் தேதி காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5-ம் தேதி மதியம் … Read more

5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு: தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு

புதுடெல்லி, 2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள், புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ரூ.1554.99 கோடி கூடுதல் தொகையை வழங்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. மொத்த தொகையான ரூ.1554.99 கோடியில் ஆந்திராவுக்கு ரூ.608.08 கோடி, நாகாலாந்திற்கு ரூ.170.99 கோடி, ஒடிசாவிற்கு ரூ.255.24 கோடி,தெலுங்கானாவிற்கு ரூ.231.75 … Read more

ஸ்கைவர் – பிரண்ட் அபாரம்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

வதோதரா, 5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் குஜராத் – மும்பை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் ஹர்லீன் … Read more

அர்ஜென்டினாவில் அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

பியூனஸ் அயர்ஸ், அர்ஜென்டினாவில் அதிபர் ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த பங்கின் விலை உயர்ந்தது. இதன்மூலம் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி அதிபருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. … Read more

'பக்கத்து வீட்டு சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவுது.. நிம்மதியா தூங்க முடியல'… வருவாய் அதிகாரியிடம் புகார் அளித்த முதியவர்

பத்தனம்திட்டா: கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அமைதியான பள்ளிக்கல் கிராமத்தில், அதிகாலையில் சேவல் கூவுவதால் இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. பள்ளிக்கல் கிராமத்தில் வசிக்கும் முதியவர் ராதாகிருஷ்ண கரூப், சேவல் கூவுவதால் இரவில் தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனக் கூறி இந்த புகாரை பதிவு செய்துள்ளார். தினமும் அதிகாலை 3 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரரான அனில் கபூரின் சேவல் இடைவிடாமல் கூவத் தொடங்குவதாகவும், இதனால் தனது தூக்கம் கெட்டு, அமைதியான வாழ்க்கை சீர்குலைவதாகவும் கூறி, … Read more

மகனுடன் சேர்ந்து விளையாட விருப்பம்: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற ஆப்கானிஸ்தான் வீரர்

காபூல், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது ஆடி வருகிறார். இந்நிலையில் முகமது நபி தனது ஓய்வு முடிவை தற்போது திரும்ப பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது மகனுடன் சேர்ந்து … Read more

இந்தியாவிடம் நிறைய பணம் உள்ளது…நாங்கள் ஏன் நிதி தர வேண்டும் – டிரம்ப் கேள்வி

வாஷிங்டன், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு வழங்கி வந்த ரூ.182 கோடி நிதியுதவியை நிறுத்துவதாக எலான் மஸ்க் தலைமையிலான டிஓஜிஇ குழு அறிவித்திருந்தது. இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் கேட்டபோது, நாங்கள் ஏன் இந்தியாவுக்கு நிதி கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஏன் ரூ.182 கோடி கொடுக்க வேண்டும். அவர்களிடமே நிறைய பணம் உள்ளது. உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இறக்குமதி வரி அதிகமாக இருப்பதால் அமெரிக்க பொருட்களை இந்தியாவுக்கு … Read more

மகா கும்பமேளா: பஸ்-லாரி மோதி விபத்து- ஒருவர் பலி, 18 பேர் காயம்

சத்திஸ்கர், சத்திஸ்கர்-மத்திய பிரதேச எல்லையில் இருந்து மகா கும்பமேளாவிற்கு தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. காலை 6 மணியளவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஹைர்ஜிதி கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பேருந்தின் உதவியாளர் உயிரிழந்தார். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காயமடைந்தவர்கள் அருகில் … Read more