பெண்கள் உலக கோப்பை; 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வெலிங்டன், பெண்கள் உலக கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.  இதில் இன்று நடந்த 21வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் லாரா உல்வார்ட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து, 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் சுனே லூவஸ் 52 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியில் … Read more

பொருளாதார தடை எதிரொலி: சூப்பர் மார்க்கெட்டில் சர்க்கரைக்கு போட்டி போட்ட ரஷியர்கள்- வைரல் வீடியோ

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 27-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபேச்சு இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதனால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போர் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  2015 ஆம் ஆண்டிலிருந்து ரஷியாவில் வருடாந்த பணவீக்கம் மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி பொருளாதார தடை எதிரொலியால் ரஷியாவில் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ளது. … Read more

தமிழகத்தின் தீர்மானத்தை கண்டித்து நாமும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் -சித்தராமையா ஆவேசம்

பெங்களூரு கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அம்மாநில அரசு புதிதாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1000 கோடியை கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து மோதல்கள் உள்ளன. கர்நாடக அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி … Read more

பெண்கள் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது இந்திய அணி

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெற்று வரும்  22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 … Read more

இங்கல்ல இலங்கையில் …! ஒரு கிலோ கோழி கறி ரூ.1,000, டீ ரூ.100, வடை ரூ.80

கொழும்பு இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை  உயர்ந்து கொண்டே வருகிறது. இலங்கையில் முட்டை மற்றும் கோழிக்கறியின்  விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால்  மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது ஒரு முட்டையின் விலை 32 முதல் 36 ரூபாய் வரையிலும், கோழிக்கறி கிலோ 850 முதல் 1000 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக … Read more

மாநில அளவிலான சிலம்ப போட்டி

திருச்சி, மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று திருச்சியில் நடந்தது. இதில் குழு மற்றும் ஓபன் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.  போட்டிகளின் முடிவில் திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 30 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர்.  இதில் இளஞ்சீரியன், சரனேஷ், கார்த்திகேயன், ராகுல், சுமித்ரா, வினோதீபா, சஞ்சனா, லட்சிதா, ஸ்ரீமன்ஹரி, கஜபிரியா ஆகியோர் … Read more

பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மானை நேரில் சந்தித்து சரண்ஜித் சிங் சன்னி வாழ்த்து..!

சண்டிகர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மேலும் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் சிரோமணி அகாலி தளம் 3 தொகுதிகளிலும் பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.  பஞ்சாபின் புதிய முதல் மந்திரியாக பகவந்த் மான் கடந்த 16-ந்தேதி பகத் சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் பதவியேற்றார். மேலும்10 மந்திரிகள் அடங்கிய பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை 19-ந்தேதி பதவியேற்றது. … Read more

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்; காயத்துடன் விளையாடி சாம்பியனான அமெரிக்க இளம் வீரர்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில், உலக தரவரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் உலக தரவரிசையில் 20வது இடம் வகிக்கும் 24 வயதுடைய டெய்லர் பிரிட்ஸ் ஆகியோர் விளையாடினர். இவர்களில், காயத்தினால் அவதிப்பட்ட அமெரிக்க வீரரான டெய்லர் போட்டியை எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.  எனினும், இந்த போட்டியை தைரியமுடன் எதிர்கொண்டு விளையாடிய … Read more

ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி – உக்ரைனின் உளவுத்துறை

கீவ் உக்ரைன் போர் காரணமாக ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷிய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன. இந்த நிலையில் ரஷியாவில் புதினின் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடைபெற்று  வருவதாக உக்ரைனின் உளவுத்துறை இயக்குனர் கைரிலோவ் தெரிவித்துள்ளார்.  பொருளாதார ரீதியாக கஷ்டத்தில் இருக்கும் அலிகார்ஸ் புதின் அரசை கவிழ்க்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு பாய்சன் கொடுத்தோ, சாலை விபத்து ஏற்படுத்தியோ, அவருக்கு உடல் ரீதியாக பாதிப்பை … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள பைரேன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

புதுடெல்லி,  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது. மணிப்பூரின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று காலையில் தலைநகர் இம்பாலில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது. … Read more