பாகிஸ்தான்: இந்திய எல்லையை ஒட்டிய சியால்கோட் ராணுவ கிடங்கில் பயங்கர வெடிவிபத்து!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட்  ராணுவ தளவாட சேமிப்பு கிடங்கில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது பாகிஸ்தானில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிக முக்கியமான இராணுவக் கண்டோன்மென்ட்களில் ஒன்றாகும்.அங்குள்ள வெடிமருந்துகள் சேமிக்கும் பகுதியில்தான் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து, அப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அடுத்தடுத்து வெடிச்சத்தம் கேட்டு கொண்டே இருந்தது … Read more

பீகார் அரசியலில் திருப்புமுனை; பாஜகவை தோற்கடிக்க லாலுவுடன் இணைந்த சரத் யாதவ்!

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், தனது லோக்தந்திரிக் ஜனதா தளத்தை(எல்ஜேடி)  லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்திரிய ஜனதா தளத்துடன்(ஆர்ஜேடி) இணைத்து கொண்டார்.   இது பீகார் மாநில அரசியலை தாண்டி தேசிய அரசியலில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பு குறித்து சரத் யாதவ் கூறியதாவது, “இது ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்குவதற்கான முதல் படியாகும். பாஜகவை தோற்கடிக்க ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம். இப்போதைக்கு, ஒற்றுமையே எங்கள் முன்னுரிமை. ஒன்றிணைந்த எதிரணிக்கு யார் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்; மகளிர் இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகள் சாம்பியன்

கலிபோர்னியா, பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகின்றன.  இதில் மகளிர் இரட்டையர் இறுதி போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த ஆசியா முகமது மற்றும் ஜப்பானை சேர்ந்த எனா ஷிபஹாரா இணையை எதிர்த்து சீனாவை சேர்ந்த சூ யிஃபான் மற்றும் யாங் ஜாவோசூவான் என்ற இணை விளையாடியது. முதல் செட்டில் 5-2 என்ற புள்ளி கணக்கில் முகமது மற்றும் ஷிபஹாரா இணை முன்னிலையில் இருந்தது.  ஆனால், சீன இணை அதிரடியாக விளையாடி 7-5 என்ற … Read more

உக்ரைன் மீது மீண்டும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா இன்று 25-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.  இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை … Read more

கோவிஷீல்ட் 2-வது டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறைப்பு

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும், சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்த தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன. கோவேக்சின் தடுப்பூசி 28 நாட்கள் கால இடைவெளியிலும், கோவிஷீல்ட் தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு மருந்தின் நோய் எதிர்ப்பு திறன் அடிப்படையில், 2-வது டோஸ் செலுத்துவதற்கான கால இடைவெளி நிர்ணயிக்கப்படுகிறது.  இந்த நிலையில் … Read more

சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது: மாலத்தீவு அரசு வழங்கியது

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு ஸ்போர்ட்ஸ் ஐகான் விருதை மாலத்தீவு அரசு வழங்கியுள்ளது .2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரெய்னா இடம் பெற்றிருந்தார். மேலும் 4 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்ற சென்னை அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ரெய்னா, ஐ.பி.எல்.ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.  சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி … Read more

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் குழப்பம்; இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னிட்டு அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. 24 தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். அவர்கள் அனைவரும் இஸ்லாமாபாத்தில்  இருக்கும் சிந்து மாளிகையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, அவர்களுக்கு எதிராக ஆளும்கட்சி தொண்டர்கள் சிந்து மாளிகையின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். திடீரென ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாளிகையின் உள்ளே புகுந்து தேசிய சட்டமன்ற உறுப்பினர்களை தாக்க தொடங்கினர்.  இது … Read more

அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன – குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி, அரசியல் கட்சிகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 1990 காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பயங்கரவாதத்தால் தான் நிகழ்ந்தது என்று கூறினார். தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட விவகாரத்தை குறிப்பிட்டு அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் … Read more

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. … Read more

கொரோனா குறித்த 3 தவறான தகவல்கள் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஜெனீவா, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை … Read more