பஞ்சாப் முதல்-மந்திரியாக பதவியேற்றார் பகவந்த் மான்…!

அமிர்தசரஸ், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று, இன்னொரு மாநிலத்தில் வெற்றிக் கொடியை நாட்டி இருப்பது இதுவே முதல் முறையாகும்.  இந்த வரலாற்று சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. பஞ்சாபின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார். இந்த நிலையில், பஞ்சாபின் … Read more

பெண்கள் உலகக்கோப்பை; இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

மவுன்ட் மாங்கானு,  நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மவுன்ட் மாங்கானுவில் நடைபெற்ற 15-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  இதன்படி இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா 8 ரன்னிலும், அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மிதாலி ராஜ் 1 ரன்னிலும் … Read more

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய உக்ரைன் போர்.. முக்கிய நகரங்களை கைப்பற்ற திணறும் ரஷிய படைகள்!

கீவ், உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். பலர் தங்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். ரஷியாவின் கொடூர செயலை கண்டித்து அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ளன. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை ஒரு போர்க்குற்றவாளி என அறிவித்து என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உக்ரைனில் பிப்ரவரி 24 அன்று ஊடுருவலைத் தொடங்கிய … Read more

கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் நாளை போராட்டம் அறிவிப்பு..!!

புதுடெல்லி, கல்வி நிறுவனங்களில் ‘ஹிஜாப்’ அணிவதற்கான தடை செல்லும் என்று கர்நாடக ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. உடனடியாக இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவி நிபா நாஸ் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை  அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்செய் ஹெக்டே இன்று  சுப்ரீம் கோர்ட்டில் முறையீட்டார். ஆனால், ஹோலி பண்டிகைக்கு பிறகு மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.  இந்நிலையில் … Read more

வரலாறு படைக்குமா ஆஸ்திரேலிய அணி; போராடும் பாகிஸ்தான்- உச்சகட்டப் பரபரப்பில் கராச்சி டெஸ்ட்

கராச்சி, பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள கராச்சி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 506 ரன்கள் இலக்கை நோக்கி ஆடுகிறது. கடைசி நாளில் ஆஸ்திரேலிய பவுலர்கள் மிரட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துறைமுக நகரான கராச்சியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 556 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டு ‘பாலோ-ஆன்’ ஆனது. இருப்பினும் ‘பாலோ-ஆன்’ … Read more

ரஷிய படைகளை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ராணுவ பொருட்களை அனுப்பும் தென்கொரியா!

சியோல், ரஷியாவின் கொடூர தாக்குதலால் உருக்குலைந்து உள்ள உக்ரைனுக்கு ஆதரவாக ராணுவ உபகரணங்களை வழங்க உள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. தென்கொரியா நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளர் போ சியூங் சான் கூறியதாவது,   “உக்ரைனுக்கு மொத்தம் 20 உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படும். அவற்றுள் 12 உபகரணங்கள், ராணுவத்துக்கு தேவைப்படும் பொருட்களான தலைக்கவசம், போர்வைகள், உணவு போன்ற பொருட்கள்  ஆகும். மீதமுள்ளவை மருத்துவ உபகரணங்கள் ஆகும். இந்த பொருட்களுக்கான மொத்த செலவு, … Read more

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் விவரம்..! மத்திய மந்திரி வெளியிட்டார்

புதுடெல்லி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் மற்றும் அந்த வழக்குகளில் தண்டனை விகிதம் உள்ளிட்ட விவரங்களை மாநிலங்களைவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக வெளியிட்டார். அதில் 2018-2020 வரையிலான கால கட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவான, பெண்கள் எதிரான பாலியல் பலாத்கார வழக்குகள் மற்றும் அந்த வழக்குகளில் வழங்கப்பட்ட தண்டனை விகிதம் குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 2020 மற்றும் 2019 ஆண்டு … Read more

புது பொலிவு பெறும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்! கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம்

சென்னை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தை 62 ஆயிரம் சதுர அடியிலிருந்து, 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கூடுதலாக 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ரூ.139 கோடியில் புதுப்பிக்கப்படுகிறது. மைதானத்தின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தலுக்கு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் … Read more

வடகொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி- நடுவானில் வெடித்து சிதறியதாக தகவல்

சியோல், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் … Read more

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்த்து கண்ணீர் விட்ட மத்திய மந்திரி…!

புதுடெல்லி, விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  இந்த திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் … Read more