சி.கே.நாயுடு கோப்பை: தமிழக அணி அறிவிப்பு

சென்னை, சி.கே.நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி (25 வயதுக்கு உட்பட்டோர்) வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக லோகேஷ்வர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அணி வருமாறு:- லோகேஷ்வர் (கேப்டன்), ஜெகநாத் ஸ்ரீனிவாஸ் (துணை கேப்டன்), கணேஷ் (விக்கெட் கீப்பர்), கவுரி சங்கர், அரவிந்த், பூபதி வைஷ்ணகுமார், விமல்குமார், சுபாங் மிஸ்ரா, ராதாகிருஷ்ணன், சோனு யாதவ், ராகுல், நிகிலேஷ் திரிலோக் நாக், அஜித் ராம், மோகன் பிரசாத், மனவ் பிராக், ஹரிஷ், … Read more

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷியாவின் பிரமாண்ட படை…!

கீவ், உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல்,பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.இதற்கிடையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது. இந்நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ்-வை ரஷிய படைகள் நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கீவ் நகருக்கு அருகில் 64 கி.மீ. நீளத்திற்கு ரஷிய படைகளின் ராணுவ … Read more

'கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தந்த மக்களுக்கு நன்றி' – அகிலேஷ் யாதவ்

லக்னோ,  உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில் 274 இடங்களைக் கைப்பற்றி பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்-மந்திரி ஆகிறார்.  கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த சமாஜ்வாதி கட்சி இந்த தேர்தலில் மொத்தம் 111 இடங்களைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்துள்ளது. மேலும் 32.06 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் … Read more

உலக கோப்பையில் மிதாலி ராஜ் புதிய சாதனை…!

ஹாமில்டன், மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்களை எடுத்தது. அமெலியா கெர் 50 ரன்னும், எமி சாட்டர்வெய்ட் 75 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 198 ரன்னில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 62 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நியூசிலாந்துக்கு … Read more

ஒரு போதும் போரை விரும்பியதில்லை – ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி

வாஷிங்டன், உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் 15-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதில், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதனிடையே துறைமுக நகரான மரியுபோலில் பிரசவ … Read more

சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்ததாக வழக்கு – சசிகலா இன்று நேரில் ஆஜர்

பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் நிறைவடைந்ததை அவர்கள் மூவரும் விடுதலையாகி விட்டனர்.   இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்ட விதிமுறைகளை மீறி சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருந்ததை சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ரூபா அம்பலப்படுத்தினார். சொகுசு வசதிகளை பெற சசிகலா ரூ.2 கோடியை லஞ்சமாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கி இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது.  அப்போது … Read more

இந்தியா-இலங்கை போட்டி நாளை தொடக்கம்: பகல்-இரவு டெஸ்டில் சுவாரஸ்யமான சாதனைகள்

பெங்களூரு,  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.  இந்த போட்டி பகல்-இரவு போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) ஆகும். ஸ்டேடியத்தில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரு நாட்களுக்கான டிக்கெட்டுகள் … Read more

ரஷிய போர் எதிரொலி; 242 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்த சிறப்பு விமானம்

புதுடெல்லி, நேட்டோவில் சேர எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து 16வது நாளாக இன்று நீடித்து வருகிறது.  போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து கூறி வருகின்றன.  ஐ.நா. அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் உள்ளிட்டோர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். போரால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் … Read more

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி; கெஜ்ரிவாலுடன் முதல்-மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் சந்திப்பு

சங்ரூர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.  பஞ்சாப் மாநில முதல்- மந்திரியான சரண்ஜித்சிங் சன்னி, தான் போட்டியிட்ட சப்காப் சாஹிப் மற்றும் பதார் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் தோல்வி கண்டார். துரி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளர் பகவந்த் மான் 58 ஆயிரத்து 206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதன்பின்  வெற்றி உரையாற்றிய பகவந்த் மான் தன்னுடைய பதவியேற்பு விழா … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் அதிர்ச்சி தோல்வி

பெர்லின்,   ஜெர்மன் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், 2013ஆம் ஆண்டு உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொண்டார்.  முதல் செட் ஆட்டத்தை சாய்னா 21-10 என இழந்தார். ஆனால் அடுத்த செட்டை போராடி கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட் ஆட்டத்தில் சாய்னாவுக்கு கடும் சவால் அளித்த ரட்சனோக் அந்த செட்டை 21-15 என கைப்பற்றினார்.   இதன் மூலம் சாய்னா, 31 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் … Read more