இந்தியாவில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா மூன்றாம் அலை இறுதிக்கட்டத்தில் உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 10 ஆயிரத்துக்கு கீழே பதிவாகிறது.   கடந்த 24 மணி நேரத்தில்  இந்தியாவில் ஒரே நாளில் 4,575 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இது நேற்றைய பாதிப்பான 3,993 ஐ விட சற்று அதிகரித்துள்ளது.    ஒருநாள் கொரோனா நேற்று 3,993 ஆக இருந்த நிலையில் இன்று 4,575 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,71,308 லிருந்து 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது. … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால், லக்‌ஷயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பெர்லின், ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன் போட்டி முல்கேம் அன்டெர் ரூ நகரில் நேற்று தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொண்டார்.  47 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், அவர் 21-15, 17-21, 21-14 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில், லக்‌ஷயா சென், தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி … Read more

9 மருத்துவமனைகள், 549 நாட்கள் – பெரும் போராட்டத்திற்கு பின் கொரோனாவில் இருந்து மீண்ட நபர்…!

வாஷிங்டன், 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 549 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இறுதியாக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாகாணம் ரோஸ்வெல் நகரை சேர்ந்தவர் டானல் ஹண்டர் (வயது 43). இவருக்கும் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொரோனா … Read more

மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு – மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-போர்ச்சுக்கல் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தின்படி தனக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்க முடியாது என தெரிவித்து அபு சலீம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில், அபு சலீமுக்கு தூக்கு தண்டனையோ, 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிறை … Read more

எனது பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கப் போகிறேன்- டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே

லண்டன், கடந்த மாத இறுதியில் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாக உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே கூறினார். ஐ.நா அகதிகள் நிறுவனம், செவ்வாயன்று அதன் பிரத்யேக இணையதளத்தில் 20 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர் என கூறியுள்ளது, அவர்களில் நூறாயிரக்கணக்கானோர் இளைஞர்கள் என்று ஜ.நா நம்புகிறது. இந்நிலையில் டென்னிஸ் வீரரான ஆண்டி … Read more

இந்தோனேசியாவில் தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

ஜகார்ட்டா, தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் வரை சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மீன்வர்கள் கேரளாவின் கொச்சி துறைமுகத்தையும், மகாராஷ்டிரா, அந்தமான் உள்ளிட்ட துறைமுகங்களையும் தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகின்றனர்.  இந்த நிலையில் குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவரின் படகு மூலம், மீனவர்கள் சிலர் அந்தமானில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இந்தோனேசியாவின் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் … Read more

சர்வதேச விமான போக்குவரத்து 27-ந் தேதி தொடங்குகிறது

புதுடெல்லி,  கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மாதந்தோறும் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த அடிப்படையில், 35 நாடுகளுக்கு மட்டும் சர்வதேச சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கமான சர்வதேச விமான போக்குவரத்து, இம்மாதம் 27-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது. இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெண்கள் உலக கோப்பை 2022: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்…!

ஹாமில்டன், நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (வியாழக்கிழமை) ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முன்னாள் சாம்பியன் சோபி டேவின் தலைமையிலான நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. வலுவான நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை தோற்கடித்தது. இந்திய அணி தனது … Read more

நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்போவதில்லை! – அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 14-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது. இந்நிலையில், நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “உக்ரைனை நேட்டோவில் இணைத்துக்கொள்ள அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை  என … Read more

5 மாநில சட்டசபை தேர்தல்: ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரிய மனு – சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி,  5 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பே ‘விவிபேடுகளை’ சரிபார்க்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராகேஷ் குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதை அவசரமாக விசாரிக்க வேண்டும் என மூத்த வக்கீல் மீனாட்சி அரோரா தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி, நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தற்போது முறையிடுகிறீர்களே என கேள்வி … Read more