தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கு: முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைது..!

புதுடெல்லி, தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், மும்பையில் உள்ள, சித்ரா ராமகிருஷ்ணன் வீடு உட்பட, அவருக்கு தொடர்புடைய அலுவலகங்களில், … Read more

ஜடேஜா டிக்ளேர் முடிவை அறிவிக்க விரும்பியது பாராட்டுக்குரியது; கேப்டன் ரோகித் சர்மா புகழாரம்

 மொகாலி, இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 (228 பந்துகள் 17 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் குவித்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 65 ஓவர்களில் … Read more

ரஷிய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்ப்பு

கீவ், உக்ரைனில் நேற்று 11-வது நாளாக ரஷிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷிய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷிய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட … Read more

மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு மொட்டை அடித்து, கைகளை பின்னால் கட்டி நடக்க வைத்து ‘ராக்கிங்’?

நைனிடால்,  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், 27 முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலை குனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெண்ணிற லேப் கோட்டுடன், முக கவசம் அணிந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சீனியர் மாணவர்களால் ‘ராக்கிங்’ செய்யப்பட்டு இவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்கள். … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் – கோவா ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது.  இந்த நிலையில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த போட்டி 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 4-வது இடம் பிடித்த கேரளா பிளாஸ்டர்ஸ் அரைஇறுதிக்கு … Read more

உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை….!

லிவிவ், சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது. உக்ரைன்-ரஷியா இடையே நடைபெற்று வரும் போரில் உயிரிழப்புகள் ஏற்பட்டு … Read more

5 மாநில தேர்தல் முடிவுகள்: ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா..?

புதுடெல்லி,  உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த தேர்தலில் பா.ஜனதா முன்னிலை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தல் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைகிறது. இந்த தேர்தல் முடிவுகள் 10-ந் தேதி வெளியாகின்றன. இந்த 5 மாநில தேர்தல் வெறும் அந்தந்த மாநிலங்களுக்கான முதல்-மந்திரியை முடிவு செய்வது மட்டுமின்றி, நாட்டின் அடுத்த ஜனாதிபதியையும் … Read more

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி: இந்தியாவுக்கு மூன்றாவது தங்கம்..!!

கெய்ரோ, எகிப்து நாட்டின் கெய்ரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் உலகக் கோப்பை ரைபிள்/பிஸ்டல் போட்டியின் இறுதி நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணிகளான ராஹி சர்னோபத், ஈஷா சிங் மற்றும் ரிதம் சங்வான் ஆகியோர் தங்கம் வென்றனர். விறுவிறுப்பான நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரை 17-13 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது. இது உலகக் கோப்பையில் ஈஷா பெற்ற இரண்டாவது … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 37.94 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே … Read more

டெல்லி: தகராறில் ஈடுபட்ட நபரை கத்தியால் குத்திய சிறுவன்..!

புதுடெல்லி, பிப்ரவரி 6 ஆம் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள சிக்னேச்சர் பாலம் அருகே நடந்த சண்டையைத் தொடர்ந்து 19 வயது இளைஞரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.  மேலும் சண்டையில் காயம் அடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். இறந்த ராம்ஜானி என்ற அந்த நபரின் முதுகில் இரண்டு கத்திக் காயங்கள் உள்ளன. அவர் சண்டையில் ஈடுபட்ட போது காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதனால் அவர் … Read more