போர் நிறுத்தம் ஏற்படுமா..? உக்ரைன்-ரஷியா இடையே மார்ச் 7ஆம் தேதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை..!

கீவ், ரஷியா உக்ரைன் உடனான போரை கை விட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐ.நா.பொது சபை உறுப்பு நாடுகள் வலியறுத்தி உள்ளன. இந்த சூழலில் உக்ரைன் எல்லையில் இருக்கும் பெலாரஸின் பிரெஸ்ட் பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை குறித்து ரஷிய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்தார்.  அதில், அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிலைப்பாடுகள் முற்றிலும் தெளிவாக உள்ளன. இதன் ஒரு பகுதியாக பரஸ்பர புரிதல் பேச்சு … Read more

காஷ்மீரில் அத்துமீறி பறந்த பாகிஸ்தான் டிரோன்: பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு..!

ஜம்மு,  பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்) மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை காஷ்மீருக்குள் வீசி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா செக்டாரில் உள்ள அர்னியா பகுதியில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளால் டிரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அர்னியா பகுதியில் நேற்று அதிகாலை 4.10 மணியளவில் டிரோன் பறக்கும் சத்தம் கேட்டது. இதை தொடர்ந்து அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2022: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று, பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.  இந்த போட்டி நியூசிலாந்தின் மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது. சர்வதேச ஒருநாள் … Read more

உக்ரைனில் 10 நாள் போரில் 2,037 ராணுவ கட்டமைப்புகள் அழிப்பு

மாஸ்கோ,  சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.  நேற்றுமுன்தினம் ஐரோப்பாவின் மாபெரும் அணுமின்நிலையம் என கருதப்படுகிற உக்ரைனின் … Read more

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.3 ஆக பதிவு

காத்மாண்டு,  நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. இத்தகவலை தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 04.37 மணிக்கு தலைநகர் காத்மாண்டுவில் இந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் இந்த நிலநடுக்கமானது நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கிழக்கு-வட கிழக்கே 166 கிமீ தொலைவில் மையமாக வைத்து உண்டானதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

மிர்புர், ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் முதலாவது போட்டியில் வங்காளதேசம் வென்று இருந்தது. ஆப்கானிஸ்தான் வீரர்கள் அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் ஆட்டநாயகன் விருதையும், பசல்லா பரூக் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். இந்த நிலையில் வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 20 ஓவர்களில் 9 … Read more

ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி படுகொலை

கீவ்,  உக்ரைன் மீது ரஷியா உக்கிரமாக போர் தொடுத்து வந்தாலும், சமரச பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி மற்றும் கடந்த 3-ந்தேதி என 2 கட்டங்களாக இருநாடுகளுக்கு இடையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. 3-வது கட்ட பேச்சுவார்த்தை வரும் திங்கள் கிழமை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் ரஷியாவுடனான சமரச பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி … Read more

உக்ரைனில் இருந்து நேற்று ஒரே நாளில் 3,772 மாணவர்கள் தாயகம் திரும்பினர்

புதுடெல்லி, உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். முதலில் இந்த பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப்படையும் களத்தில் குதித்தது. விமானப்படையின் சி-17 … Read more

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நாளை மோதல்

மவுன்ட் மாங்கானு, நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை), பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது.  இந்த போட்டி மவுன்ட்மாங்கானுவில் நடைபெறுகிறது. அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இளம் வீராங்கனைகளை உள்ளடக்கிய இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ் அணிகளை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.  சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்தியாவுடன் மோதிய 10 ஆட்டங்களிலும் … Read more

’விமானங்கள் பறக்க தடை’ என அறிவிக்கக்குமாறு உக்ரைன் கோரிக்கை – நிராகரித்த நேட்டோ

கீவ், உக்ரைன் மீது 10-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு … Read more