2-ம் கட்ட பேச்சுவார்த்தை: போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க இரு நாடுகளும் ஒப்புதல்

மாஸ்கோ, உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

“இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு தாமதமாக தொடங்கியது” – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உக்ரைனில் இந்திய மாணவர் பலியானதை தொடர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறது. ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலர் மாணவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- “மத்திய அரசு மீட்பு நடவடிக்கையை தாமதமாக தொடங்கியது. உக்ரைனில் எந்த அசம்பாவிதமும் நடக்காது என்ற நம்பிக்கையை இந்தியர்கள் மனதில் உருவாக்கி தவறு … Read more

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்

மவுன்ட் மாங்கானு, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி 1973-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடைசியாக 2017-ம் ஆண்டு சொந்த நாட்டில் நடந்த உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை அரங்கேறுகிறது. இந்த போட்டியில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, … Read more

உக்ரைனுடனான போரில் படையினர் உயிரிழப்பு – முதல் முறையாக ஒப்புக்கொண்ட ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் மீது 8-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைனுடனான போரில் தங்கள் தரப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை ரஷியா முதல் முறையாக வெளியிட்டுள்ளது.  ரஷியா பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷிய வீரர்கள் 498 … Read more

வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறித்து மத்திய மந்திரி கருத்து – டி.கே.சிவக்குமார் கண்டனம்

பெங்களூரு, குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்கள் படிக்க வெளிநாடுகளுக்கு செல்வதாகவும், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களில் 90% பேர் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெறுவதில்லை என்றும் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார்.  இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- “உக்ரைனில் கர்நாடக மாணவர் நவீன், ரஷியாவின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, இந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் உக்ரைனில் சென்று படிக்கிறார்கள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: மும்பையை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது.  இந்த தொடரில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் மும்பையை தோற்கடித்து 9-வது … Read more

தென்கொரியாவில் ஒரே நாளில் 2.19 லட்சம் பேருக்கு கொரோனா

சியோல், கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் ஒமைக்ரான் தொற்றின் எதிரொலியால் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வந்த நிலையில், நேற்று அது 2 லட்சத்தை தாண்டியது. அந்த வகையில் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 241 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் … Read more

பொருளாதார தடைகள் எஸ்400 ஆயுதத்தை இந்தியாவுக்கு வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தாது – ரஷியா

புதுடெல்லி, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் ஐரோப்பியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து வருகின்றன.  இதனால், ரஷியாவிடமிருந்து ஒப்பந்தத்தின்படி அதிநவீன எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பின் எஞ்சிய … Read more

காயத்தால் அவதி: ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பெரும்பாலான ஆட்டங்களை தவற விடும் தீபக் சாஹர்

புதுடெல்லி,  15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்தது. வருகிற 26-ந்தேதி ஐ.பி.எல். தொடங்க உள்ள நிலையில் தீபக் சாஹர் காயத்தில் சிக்கியிருப்பது சென்னை அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.  கடந்த மாதம் 20-ந்தேதி கொல்கத்தாவில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியின் போது அவருக்கு வலது கால் தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. பரிசோதனையில் தசைநார் கிழிந்து … Read more

“உக்ரைனில் பணயக் கைதிகளாக இந்திய மாணவர்கள்”- ரஷ்யா பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி, உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபர் புதினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.  அதிலும் குறிப்பாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் ரஷிய எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் கார்கிவ் நகரில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் … Read more