உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!

புவனேஸ்வர், மும்பை-புவனேஸ்வர் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் உரிய ஜிஎஸ்டி ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.16 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்க நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  முன்னதாக, நேற்று மும்பையைச் சேர்ந்த ஹஸ்முக்லால் ஜெயின், சுர்சே சஹாதேவ் கரே, மகேஷ் போம்சர் மற்றும் தீபக் படேல் ஆகிய 4 பேரும் ஒவ்வொரு பையிலும் தலா 8 கிலோ தங்க நகைகள் கொண்ட 4 பைகளுடன் மும்பை-புவனேஸ்வர் செல்லும் கோனார்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். … Read more

கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியில் ரகானே-புஜாரா இடங்களை நிரப்பப்போவது யார்..?

மொகாலி,  இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இது இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100-வது டெஸ்ட் என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் நேற்று தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.  இந்த நிலையில், இப்போட்டியில் அஜிங்கியா ரகானே மற்றும் சடேஷ்வர் புஜாரா ஆகிய இருவருடைய இடத்தை பிடிப்பதற்கான போட்டி … Read more

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் – ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜெனீவா, உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், உக்ரைன் மீது … Read more

பெங்களூருவின் மக்களுக்காக பாதயாத்திரை நடத்துகிறோம் – கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

பெங்களூரு, மேகதாது திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள சங்கமாவில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. 4 நாட்கள் நடந்த பாதயாத்திரை கொரோனா 3-வது அலை காரணமாக ஜனவரி 13-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் மீண்டும் பாதயாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று 3-வது நாள் … Read more

அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்கிறது இந்திய கிரிக்கெட் அணி

டுப்லின், இரண்டு போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே மாதம் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு இந்தியா வரும் தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடர் ஜூன் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பிறகு … Read more

'மிகவும் வருந்துகிறோம்’ – உக்ரைனிடம் வருத்தம் தெரிவித்த சீனா

பிஜீங், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து … Read more

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.4.33 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரம் பக்தர்களும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை என வார நாட்களில் 80 ஆயிரத்தில் இருந்து 95 ஆயிரம் பக்தர்களும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் போன்ற விழா நாட்களில் … Read more

விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி

மொகாலி, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 20 ஓவர் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி அபார பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை காண முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில்  தற்போது இப்போட்டியை காண 50 சதவீத ரசிகர்களுக்கு  பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த போட்டி … Read more

உக்ரைன் போர்… மிக சக்தி வாய்ந்த வேக்யூம் குண்டு வீசிய ரஷியா..!

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷிய படைகள் குண்டு … Read more

ஷீரடி சாய்பாபா கோவில்: அதிகாலை, இரவு நேர பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி

மும்பை, மராட்டியத்தில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் அதிகாலை மற்றும் இரவு பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.  இந்த நிலையில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. எனவே ஷீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் பக்தர்கள் அதிகாலை, இரவு பூஜையில் கலந்து கொள்ளலாம் என அறிவித்து உள்ளது.  இது குறித்து கோவில் அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி பாக்யஸ்ரீ … Read more