உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க நடவடிக்கை – பாதுகாப்புத்துறை மந்திரி தகவல்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைனில் இருந்து மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களையும் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து … Read more

புரோ கபடி : பாட்னா – டெல்லி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதின . இந்த போட்டியில் 38-27 என்ற புள்ளி கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது  இதையடுத்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் … Read more

இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும் – போரிஸ் ஜான்சன்

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் சிறப்பு ராணுவ … Read more

“ஐ லவ் யூ” என கூறுவது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பதில்லை – சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

மும்பை, மும்பை வடாலா பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் மீது 17 வயது சிறுமியின் குடும்பத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு புகார் ஒன்றை கொடுத்தனர். இதில் சம்பவத்தன்று வாலிபர் வெளியே சென்ற சிறுமியை பார்த்து கண் சிமிட்டியதுடன், அவளிடம் “ஐ லவ் யூ” என கூறியதாகவும், தட்டிகேட்ட அவரது தாயை மிரட்டியதாகவும் கூறியிருந்தனர். இதன்பேரில் அந்த வாலிபர் மீது வடாலா போலீசார் பாலியல் குற்றங்களில் குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த … Read more

ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியல்; சூரியகுமார், வெங்கடேஷ் முன்னேற்றம்

புதுடெல்லி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 3-0 என்ற புள்ளி கணக்கில் போட்டி தொடரை நடத்திய இந்தியா முழு அளவில் வெற்றி பெற்றது. இதனால், ஐ.சி.சி. டி20 தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் முன்னேறி செல்ல வாய்ப்பு அமைந்தது.  இந்த தொடரில், சூரியகுமார் அதிகளவில் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.  அவருக்கு அடுத்து வெங்கடேஷ் 2வது இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து பேட்டிங் தரவரிசையில், 35வது இடத்தில் இருந்து 21வது … Read more

“ஜெர்மனியின் நாஜி படையைப் ரஷியா தாக்குதல் நடத்துகிறது” – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

கீவ், உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் நாஜி படைகள் தாக்கியது போல் உக்ரைன் மீது ரஷ்யா … Read more

பண மோசடி வழக்கில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் கைது

மும்பை, மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மந்திரி  நவாப் மாலிக் , சட்ட விரோதமாக பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.  இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் நவாப் மாலிக் வீட்டிற்கு சென்ற அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், அவரை … Read more

சூர்யகுமார் யாதவ், தீபக் சாகர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகல்

லக்னோ: ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரையும், 20 ஓவர் தொடரையும் கைப்பற்றியது. சொந்த மண்ணில் நடந்த இந்த போட்டிகளில் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணி அடுத்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.இதில் பங்கேற்பதற்கான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. முதல் 20 … Read more

உலகம் தற்போது அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளது – ஐ.நா.தலைவர்

ஜெனீவா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா அங்கீகரித்தது.  இதனை தொடர்ந்து … Read more

ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல – கோர்ட்டு தீர்ப்பு

மும்பை மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில்  ஒருவரிடம் … Read more