உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டருக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.  இந்நிலையில் மேக்னஸ் கார்ல்சனை … Read more

உக்ரைன் விவகாரம்: இந்தியாவின் "சுதந்திர நிலைப்பாட்டை" வரவேற்கிறோம் – ரஷ்யா

புதுடெல்லி, உக்ரைன் விவகாரத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார்.  இந்த அறிவிப்பு காரணமாக, உக்ரைன் விவகாரத்தில் பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் விவகாரம் … Read more

உத்தரபிரதேச தேர்தல்; 200 துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வாக்களித்தார் மந்திரி அஜய் மிஸ்ரா!

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 4-ம் கட்ட சட்டசபை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 4 விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்த லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.  இந்த நிலையில்,உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்களிக்க வந்த மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஹைதராபாத் – கேரளா அணிகள் இன்று மோதல்

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஹைதராபாத் – கேரளா அணிகள் மோதுகின்றன  ஹைதராபாத் அணி விளையாடிய 17 போட்டிகளில் 9 வெற்றி ,5 டிரா ,3 தோல்வி என புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது … Read more

உக்ரைன் விவகாரம்:ரஷிய நலன்களில் எந்த சமரசமும் செய்யப்போவதில்லை- புதின் பிடிவாதம்

மாஸ்கோ:  கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் எல்லையில் ரஷியா சுமார் 1½ லட்சம் படை வீரர்களை நிலை நிறுத்தி உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாகவே இரு நாடுகளின் எல்லையில் கடுமையான போர் பதற்றம் நிலவி வருகிறது இந்த சூழலில் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டன்ட்ஸ்க் ஆகிய 2 மாகாணங்களையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக ரஷிய அதிபர் புதின் … Read more

வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மனுக்கள்- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, முந்தைய அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் … Read more

முதல் டி20 போட்டி : இந்தியா-இலங்கை அணிகள் நாளை மோதல்

லக்னோ, இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டி,,2 டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது .இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இலங்கைக்கு எதிரான  டி20 போட்டி தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் மோசடி: 2 சீனர்கள், 115 நேபாளிகள் கைது

காத்மண்டு, நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டு மற்றும் பக்தப்பூரில் சில கும்பல் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காத்மண்டு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலியாக நிறுவனங்களை பதிந்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு இடங்களில் மொத்தம் 2 சீனர்கள், 115 நேபாளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் … Read more

முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர், “வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக … Read more

புரோ கபடி : அரையிறுதி போட்டியில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் , பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதன் எலிமினேட்டர் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் , பாட்னா பைரேட்ஸ், யுபி யோத்தா, தபாங் டெல்லி மற்றும் பெங்களூரு புல்ஸ் ஆகியவை அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.  இந்த நிலையில், இன்று  நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பாட்னா பைரேட்ஸ்- யுபி யோத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதையடுத்து நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தபாங் … Read more