கேட்சை தவறவிட்டதால், சக வீரரின் கன்னத்தில் அறைந்த பாகிஸ்தான் வீரர்

கராச்சி, பாகிஸ்தானில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியான பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் லாகூர் குலாண்டர்ஸ் அணி வீரர் கம்ரான் குலாம், ஒர் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டதால், சக வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ஹாரிஸ் ரவுப் அவரின் கன்னத்தில் அறைந்தார். ஆனால் கம்ரன் குலாம் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கம்ரான் குலாம் ரன் அவுட் மூலம் வஹாப் ரியாசை வெளியேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ஹாரிஸ் … Read more

உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கிவிட்டது – இங்கிலாந்து மந்திரி

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா நேற்று அங்கீகரித்தது.  இதனை … Read more

லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை 20 சதவீத சிறுநீரக திறனுடன் மட்டுமே இயங்கி வருகிறது – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!

ராஞ்சி, 73 வயதான பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்(ராஷ்டிரிய ஜனதா தளம்)  5-வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15-ந் தேதி குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ அறிவியல் நிலைய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை 20 சதவீத சிறுநீரக திறனுடன் மட்டுமே இயங்கி … Read more

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டருக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.  இந்நிலையில் உலகச் சாம்பியனான … Read more

அமெரிக்கா: டெல்டாவை விட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய ஒமைக்ரான்…

சான்பிரான்சிஸ்கோ, சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் பாதிப்புகள் 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளன. இவற்றில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.  இந்த நிலையில், அமெரிக்காவில் டெல்டா பாதிப்புகளை விட ஒமைக்ரான் பாதிப்புகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன என தி சியாட்டில் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 1 முதல் அக்டோபர் 31 வரையில் … Read more

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து – 7 பேர் பலி

சிம்லா, இமாச்சலபிரதேச மாநிலம் உன்னா மாவட்டத்தின் பதூ என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. அங்கு தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. அந்த பட்டாசு ஆலையில் 15-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆலையில் தொழிலாளார்கள் இன்று வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்து பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்தது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் … Read more

அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம்: ராகுல் டிராவிட்

கொல்கத்தா, டி20 உலகக்கோப்பை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வீரர்கள் தொடர்ந்து தங்கள் திறமையை வெளிப்படுத்தி  வருகின்றனர். இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை குறித்து  இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறும்போது; டி20  உலக கோப்பை போட்டிக்கான அணி எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்பதில் கேப்டன் ரோகித் சர்மா, தேர்வு குழுவினர், அணி நிர்வாகம் என எங்கள் அனைவருக்குமே ஒரு … Read more

ரஷ்யா-பெலாரஸ் கூட்டு ராணுவ பயிற்சி – மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

மாஸ்கோ, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் 1 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்துள்ளதால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது முழுமையாக படையெடுப்பதற்கு தேவையான ராணுவ படைகளில் … Read more

மணிப்பூர்; அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துள்ளது – பிரதமர் மோடி

இம்பால், மணிப்பூர் மாநிலம் ஹீங்காங்கில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த மாதம் மணிப்பூர் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. கடந்த பல ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பல அரசாங்கங்களை கண்டுள்ளது. பல வருடங்கள் காங்கிரஸ் ஆட்சிக்குப் பிறகு, மணிப்பூரில் சமத்துவமின்மை மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில், பாஜகவின் இரட்டை இயந்திர அரசு, மணிப்பூரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கி உழைத்தது. பாஜகவின் நல்லாட்சியையும், நல்ல … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : மும்பை -ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை -ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன  மும்பை அணி விளையாடிய 16 போட்டிகளில்  7 வெற்றி ,4 டிரா ,5  தோல்வி என புள்ளி பட்டியயலில் 6 வது இடத்தில் உள்ளது … Read more