இன்னும் சில நாட்களில் சிறை செல்லும் பா.ஜனதா தலைவர்களின் பெயரை இன்று அறிவிப்பேன்: சஞ்சய் ராவத்

பதிலடி கொடுக்கப்படும் மராட்டியத்தில் மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க உதவி செய்யுமாறு சிலர் தன்னை அணுகியதாக கடந்த சில நாட்களுக்கு முன் சிவசேனாவை சேர்ந்த மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கூறியிருந்தார். இந்தநிலையில் அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய முகமைகளின் அதிகாரத்தை வைத்து எங்களை மிரட்ட வேண்டாம். நாங்கள் அதற்கு பயப்படபோவதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. இதேபோல சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே குடும்பத்தின் மீது கூறப்படும் பொய்யான … Read more

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெங்களூருவில் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி..!

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் வாரியம் நிறுவிய தேசிய கிரிக்கெட் அகாடமி 2000-ம் ஆண்டில் இருந்து பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதான வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இளம் வீரர்களுக்கு பயிற்சி மற்றும் காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை அளிப்பது தேசிய கிரிக்கெட் அகாடமியின் பிரதான பணியாகும்.  இந்த நிலையில் கூடுதல் வசதி வாய்ப்புகளுடன் புதிய தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் தேவனஹள்ளி என்ற இடத்தில் 40 ஏக்கரில் அமைக்கப்படுகிறது. இதற்கான நிலத்தை கிரிக்கெட் வாரியம் … Read more

இந்தியாவும், சீனாவும் எல்லை ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும் ஜெய்சங்கர் கருத்துக்கு சீனா பதில்

பீஜிங்,  ஆஸ்திரேலியாவில் ‘குவாட்’ நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு சீனாதான் காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது கருத்துக்கு பதில் கூறும் விதமாக சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘எல்லை விவகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியா-சீனா இரு நாடுகளும் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை பின்பற்ற வேண்டும், எல்லைப் பகுதியில் கூட்டாக … Read more

கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி: கர்நாடக ஐகோர்ட்டு

ஆன்லைன்சூதாட்டங்களுக்கு தடை கர்நாடகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அரசு தடை விதித்திருப்பதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. தடை விதிப்பது சரியல்ல அதன்படி, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று நீதிபதிகள் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது கேரளா பிளாஸ்டர்ஸ்..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நீடிக்கிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ அணி தன்னுடைய 7-வது வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் … Read more

பிரான்சில் உள்ள மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி..!

பாரிஸ்,  தெற்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (திங்கள்கிழமை) காலை தெற்கு பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள மளிகைக்கடை ஒன்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. பின்னர் தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியது.  இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட … Read more

விடுதி உரிமையாளருடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்பட 2 பேர் கைது

பெரும்பாவூர், கேரள மாநிலம் மட்டாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரின்சினா (வயது 26). இவர் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த மாதம் 25-ந் தேதி தனது ஆண் நண்பர் ஆட்டோ டிரைவரான ஷாஜகானுடன் (27) வந்தார். பின்னர் இருவரும் அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஷாஜகான் திடீரென்று அந்த விடுதி உரிமையாளரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதில் தாங்கள் இருவரும் விடுதியில் உள்ள குளிர்பானத்தை வாங்கி … Read more

‘கோடி’களில் ஏலம் எடுக்கப்பட்ட ஜூனியர் வீரர்கள்..!

பெங்களூரு, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 வது நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த நிலையில் இன்று 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் ஆடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. ஜூனியர் வீரர்களில், இந்தியா 5-வது முறையாக ஜூனியர் உலக கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கட் பாவாவை ரூ.2 கோடிக்கு பஞ்சாப் … Read more

இந்தோனேசியாவில் ராட்சத அலையில் சிக்கி 11 பேர் பலி

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள ஜெம்பர் மாவட்டத்தில் பயங்கன் என்கிற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் நேற்று பாரம்பரிய சடங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்து. இதையொட்டி 20-க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கடலில் திடீரென எழுந்த ராட்ச அலை கரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் தேசிய பேரிடர் மீட்பு … Read more

ஐதராபாத் அருகே ராமானுஜரின் தங்க திருவுருவச் சிலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்

ஐதராபாத்,  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதியில் முச்சிந்தல் கிராமத்தில் உள்ள ஜீவா ஆசிரமத்தில், 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மிகப் பெரியவர் ராமானுஜரின் புகழைப் போற்றும்விதமாக சமத்துவ சிலை வளாகம் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 120 கிலோ தங்கத்தில் ராமானுஜரின் திருவுருவச் சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. சமத்துவ சிலை வளாகத்தின் உள் கருவறைப் பகுதியில், பரந்த தியான மண்டபத்தை நோக்கியதாக இச்சிலை அமைந்திருக்கிறது. பக்தர்கள் இந்த தியான மண்டபத்தில் அமைதியாக தியானத்தில் ஆழலாம். கி.பி.1017-ம் ஆண்டில் தமிழகத்தில் பிறந்த ராமானுஜர், … Read more