அமெரிக்கா தங்கள் நோக்கங்கள் நிறைவேற பாகிஸ்தானை பயன்படுத்திக்கொண்டது – இம்ரான்கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக கடந்த 3-ம் தேதி முதல் 6 வரை சீனா சென்றார். அங்கு பிஜீங் குளிர்கால ஒலிம்பிக் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக இம்ரான்கான் பங்கேற்றார். சீன பயணத்தின் போது இம்ரான்கான் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, அவரிடம் அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இம்ரான்கான், தேவைப்படும்போது அமெரிக்கா பாகிஸ்தானுடன் உறவை ஏற்படுத்துகிறது. இதனால், ரஷியாவுக்கு பாகிஸ்தான் எதிரியாகிறது.  தங்கள் நோக்கங்கள் … Read more

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு..!

புதுடெல்லி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 22.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-  புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது … Read more

3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரவெற்றி- வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை "ஒயிட் வாஷ்" செய்தது

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோகித் சர்மா 13 ரன்களிலும், ஷிகர் தவன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களமிறங்கிய விராட் கோலி, ரன் ஏதும் எடுக்காமல் … Read more

நேபாளத்தில் காலணி கடையில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு

லும்பினி, நேபாள நாட்டின் டாங் மாவட்டத்தில் துளசிபூர் நகரில் காலணி கடை ஒன்று அமைந்து உள்ளது.  இந்நிலையில், கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.  தீ விபத்தில் 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. அவர்கள் சஜிதா கட்டூன் (வயது 13), ஹசன் பக்ஷ் (வயது 14), மசின் … Read more

மராட்டியத்தில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 5 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 6 ஆயிரத்து 248-ஐ விட குறைவாகும்.  இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 35 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் … Read more

இலங்கைக்கு எதிரான டி20: ஆஸ்திரேலிய அணி வெற்றி

சிட்னி, இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி 20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் பின்ச் 8 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மெக்டர்மோட் அரைசதம் அடித்து வெளியேறினார்.  ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும், … Read more

எய்ட்ஸ் நோய்க்கான வைரசை கண்டறிந்த பிரபல விஞ்ஞானி காலமானார்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வைரஸ் விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு பெற்றவரான லக் மான்டேக்னீயர் பாரீஸ் புறநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.  அவருக்கு வயது 89.  எய்ட்ஸ் எனப்படும் ஆள்கொல்லி நோயை ஏற்படுத்த கூடிய எச்.ஐ.வி. எனப்படும் வைரசை கண்டறிந்தவர்களில் லக் ஒருவர் ஆவார். கடந்த 2008ம் ஆண்டு பிரான்கோயிஸ் பர்ரே-சினோவ்சி மற்றும் ஹரால்டு ஜர் ஹாசன் ஆகியோருடன் அவர் மருத்துவ துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டார். லக் மற்றும் சினோவ்சி ஆகிய … Read more

கர்நாடகாவில் வரும் திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு; முதல்-மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.  ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் … Read more

தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு 5 தமிழக வீரர்கள் தேர்வு

சென்னை, சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த 11-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அணியை சேர்ந்த ஆர்.நிஷி தேவஅருள், வி.அரவிந்த், ஆர்.கவியரசன், பி.சதீஷ், என்.திலீபன் ஆகியோர் தேசிய ஜூனியர் ஆக்கி அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அவர்கள் கனிமொழி எம்.பி.யை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழ்நாடு ஆக்கி சங்க தலைவர் சேகர் மனோகரன், தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் பிராங்க் பால் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு … Read more

லிபியா பிரதமரை கொல்ல முயற்சி..! காரில் சென்றபோது துப்பாக்கிச்சூடு

திரிபோலி,  லிபியா நாட்டின் பிரதமராக அப்துல் ஹமீத் அல் திபய்பா (வயது 62) உள்ளார். இவர் நேற்று தலைநகர் திரிபோலியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவர் கார் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பினர். இந்த கொலை முயற்சியில் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லிபியாவில் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்கு அரசியல் குழப்பமும் நிலவுகிறது.