ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியத்தில் கிறுக்கிய காவலாளி; வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே பணிநீக்கம்..!

மாஸ்கோ, ரஷியாவில் நடைபெற்ற கலை கண்காட்சியில் பாதுகாப்பு காவலாளி ஒருவர் போரடித்தது என்று ஓவியம் ஒன்றின் மீது கிறுக்கியதால் சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள ஓவியம் சிதைக்கப்பட்டது. மேற்கு ரஷியாவில் யெகாடெரின்பர்க் நகரத்தில் உள்ள யெல்ட்சின் மையத்தில் இந்த கலை கண்காட்சி நடைபெற்றது. 60 வயதுள்ள அந்த காவலாளி வேலைக்குச் சென்ற முதல் நாளே, டிரெட்டியாகோவ் கேலரியில் இருந்து கடனாகப் பெறப்பட்ட கலைஞர் லெபோர்ஸ்காயாவின் ‘மூன்று உருவங்கள்’ (Three Figures) என்ற ஓவியத்தின் மீது பால்பாயிண்ட் … Read more

உ.பி. முதல்கட்ட தேர்தல் : 60.17 % வாக்குகள் பதிவு..!

லக்னோ, உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.  இதன் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று நடைபெற்றது  11 மாவட்டங்களில் அடங்கிய 58 தொகுதிகள், முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. 623 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 9 பேர் மந்திரிகள் ஆவர். தேர்தலையொட்டி, 58 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மத்திய படையினரும், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த பதற்றமான பகுதிகளில் … Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

அகமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக முன்னதாக ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர்களால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது. கொரோனா பாதிப்புக்கு ஆளான தவன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே … Read more

பிரிட்டன் இளவரசருக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று.!

லண்டன், பிரிட்டன் இளவரசர் சார்லஸ் இன்று காலை கொரோனா பறிசோதனை செய்துள்ளார். இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளார். அவர் கடந்த டிசம்பரில் கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும், தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இளவரசர் சார்லஸ் ஏற்கெனவே கடந்த மார்ச் 2020-ல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேரு நினைத்திருந்தால் சில மணி நேரத்தில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம் – பிரதமர் மோடி பாய்ச்சல்

பனாஜி, 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த (1947) பிறகு … Read more

புரோ கபடி லீக்: இன்று பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதல்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி அணியும் மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது மற்றொரு ஆட்டத்தில் புனேரி பல்டன் அணியும், பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

சிக்னலை மதிக்காமல் சென்ற முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர்: காரை மறித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் கிரெக் ராபின்சன். இவர் கடந்த திங்களன்று அங்குள்ள கிழக்கு பேயூ ரோட்டில் காரில் வந்தபோது போக்குவரத்து சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளார்.  இதனால், அவரது காரை மறித்த போலீஸ் அதிகாரிகள் காரை சோதனை செய்தனர். அப்போது அதில் கோகோயின், கிராக் கோகோயின், ஆக்ஸிகோடோன், ஹைட்ரோகோடோன், சானாக்ஸ் மற்றும் மரிஜுவானா போன்ற போதைப்பொருட்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து கிரெக் ராபின்சனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை செய்ததில், அவரிடம் … Read more

மத்திய படையினர் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்கு: மாநிலங்களவையில் தகவல்

புதுடெல்லி,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய மந்திரி நித்யானந்த்ராய் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் இடம் பெற்றிருந்த முக்கிய தகவல்கள்:- * 7 மத்திய போலீஸ் படைகளில் 1,439 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. * 181 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. * அதிகபட்சமாக எல்லை பாதுகாப்பு படையினர் மீது 481 மீதும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 273 பேர் மீதும் கிரிமினல்-ஊழல் வழக்குகளும் போடப்பட்டுள்ளன. … Read more

2-வது ஒருநாள் போட்டி: 44 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

ஆமதாபாத், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி அதே மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இப்போட்டியில் டாஸ் வென்ற … Read more

இங்கிலாந்தில் 1.80 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…!

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 68,214 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,00,119  ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 276 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 55 … Read more