பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத், 6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 போட்டி இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் பி.எஸ்.எல். போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்க இருப்பதாக போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்துள்ளார். இது போட்டிக்கான சரியான சூழல் கிடையாது. என்றாலும் பி.எஸ்.எல். … Read more

இரவு பகலாக தாக்குதல்… பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்த இஸ்ரேல்

டெல் அவிவ், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஓராண்டாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில், பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத சூழலில், திடீரென இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட தொடங்கியது. பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியது. தாக்குதலையும் தீவிரப்படுத்தி … Read more

அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில், சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அந்த வாலிபர், சிறுமியின் பெற்றோரிடம் தங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கிடையில், கடந்த 7-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு தனது நண்பருடன் சென்ற வாலிபர், அவளை மது அருந்த கட்டாயப்படுத்தி கூட்டுக் பலாத்காரம் செய்துள்ளார். … Read more

கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதி பில் சால்ட் ஆரம்பம் முதலே … Read more

டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்தில் மாகாண கவர்னர் மரணம்: பலி எண்ணிக்கை 113 ஆனது

சாண்டோ டொமிங்கோ: கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ‘ஜெட் செட்’ என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். அரசியல் பிரமுகர்கள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று … Read more

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரே வாரத்தில் வாலிபருடன் ஓடிப்போய் திருமணம் செய்த பெண் – கணவர் அதிர்ச்சி

பெங்களூரு, பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா டவுன் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி நேத்ராவதி (வயது 30). இந்த தம்பதிக்கு கடந்த 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். டிரைவரான ரமேஷ் லாரி ஓட்டி வருகிறார். திருமணமான புதிதில் தம்பதி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டாக அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்தது. லாரி டிரைவர் என்பதால், வாரத்தில் … Read more

ஹெட்மயர் அதிரடி வீண்: ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 3-வது ஓவரிலேயே ஜோப்ரா ஆர்ச்சரிடம் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க … Read more

தீவிரமடையும் வர்த்தகப்போர்: சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்வு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியா, சீனா, உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத வரி விதித்துள்ளார். அதேபோல், சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாத துவக்கத்தில் 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். அமெரிக்காவிற்குள் பென்டானில்(Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க … Read more

புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்: இரண்டு மாணவிகளை 10-க்கும் மேற்பட்டோர் சீரழித்த கொடூரம்

புதுச்சேரி, புதுச்சேரி நகரப்பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகினர். இது குறித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவிகளை தேடினர். இதற்கிடையே அன்றைய தினம் இரவே 2 மாணவிகளும் வீட்டிற்கு வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் சோர்வாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அந்த மாணவிகள் இருவரையும் அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, … Read more

சாய் சுதர்சன் அதிரடி… ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் டைட்டன்ஸ்

ஆமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் 23-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் 3-வது ஓவரிலேயே ஜோப்ரா ஆர்ச்சரிடம் 2 ரன்களில் … Read more