தாஜ்மஹாலுக்காக இழப்பீடு கொடுத்த முகலாய பேரரசர் ஷாஜகான் – பாஜக எம்.பி பேச்சால் புதிய சர்ச்சை

புதுடெல்லி, தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன், அப்பகுதியில் கோயில் இருந்ததாகக் கூறி தற்போது மீண்டும் தொடுக்கப்பட்ட வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அயோத்தியின் பாஜக செய்தித்தொடர்பாளரான டாக்டர்.ரஜ்னீஷ் என்பவர் தொடுத்த மனு, கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளைத் திறந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் ஆய்வு மையத்திற்கு உத்தரவிடக் கோரிய மனுவை அலகாபாத் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  இந்நிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் … Read more

ஐபிஎல் : சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு : ஜடேஜா தொடரிலிருந்து விலகல்..!

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இந்த தொடரில் சென்னை அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது .தற்போதுவரை சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பில் இருந்து வெளியேறவில்லை. இந்நிலையில் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இந்த தொடரில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் .இது சென்னை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூரு … Read more

இலங்கையில் விரைவில் புதிய பிரதமர் – அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சேவே காரணம் என்று கூறும் அங்குள்ள மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை பிரகடனம் செய்தும், அதுவும் எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை. மக்களின் எதிர்ப்பும், கோபாவேசமும் மேலும் வலுத்தது. இந்த நிலையில், இதுவரையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறி வந்த மகிந்த ராஜபக்சே, நேற்று முன்தினம் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பதவி விலகினார்.  அதேநேரத்தில், அரசுக்கு … Read more

திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்..!

ரேவா, மத்தியப்பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் வினோத் சுக்லா என்பவரின் மகள் நேஹாவுக்கும், நாகேந்திரமணி மிஸ்ரா என்பவரின் மகன் பியூஷ் மிஸ்ராவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் திருமணத்தன்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது மணமகன் குடிபோதையில் இருப்பது மணமகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரை திருமணம் செய்துகொள்ள மணமகள் மறுத்துள்ளார். மணமகளது முடிவை முழுமையாக ஏற்றுக்கொண்ண பெண்ணின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர். அதன்பிறகு, போலீஸ் நிலையம் சென்று பரஸ்பர ஒப்புதலுடன் பரிமாறப்பட்ட பணம் மற்றும் … Read more

ஐபிஎல் : டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அஸ்வின் அரைசதம்

மும்பை, ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் வந்த அஸ்வின் … Read more

ஜெர்மனியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவு பணவீக்கம் அதிகரிப்பு

பெர்லின், ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனியில் எரிபொருள் விலை 35.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த … Read more

டெல்லியில் இன்று 970 பேருக்கு கொரோனா; 1,238 பேர் டிஸ்சார்ஜ்

புதுடெல்லி, டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 970 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 18,97,141 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,184 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 1,238 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.  … Read more

ஐபிஎல் : டெல்லி அணிக்கு 161 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

மும்பை,  ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது  தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் ,யாஸஷ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர் .பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார் .பின்னர் வந்த அஸ்வின் சிறப்பாக … Read more

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியை ஊக்குவிக்க இந்தியா நிதி

நியூயார்க், ஐக்கிய நாடுகள் சபையில்  இந்தி மொழியை ஊக்குவிக்க இந்தியா 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 6.18 கோடி ரூபாய்) நிதியை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நியூயார்க்கில் உள்ள ஐநா சபைக்கான இந்திய தூதரகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஐநா அவை செய்திகளை இந்தியில் மொழிபெயர்த்து உலகம் முழுவதும் இந்தி பேசும் லட்சக்கணக்கானோரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ஐநாவின் உலகளாவிய தகவல் தொடர்பு … Read more

உத்தரப்பிரதேசம்: ஆட்டோ மீது லாரி மோதியதில் தாய், மகன் உட்பட 3 பேர் பலி..!

ஹர்தோய், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தின் ஹர்பால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா- பில்ஹூர் நெடுஞ்சாலையில் ஆட்டோ மீது லாரி மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூர்த்தி தேவி (வயது 30) என்ற பெண், அவரது எட்டு வயது மகன் சச்சின் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்வர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.   விபத்து நடந்ததும் லாரியின் ஓட்டுனரும், உதவியாளரும் … Read more