ஐபிஎல் : பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது பெருமை அளிக்கறது -குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியா

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் நேற்று  நடைபெற்ற  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.   இந்த ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று .இந்த தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது . இந்நிலையில் வெற்றிக்கு பிறகு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறியதாவது ; உண்மையிலேயே எங்கள் அணி வீரர்களை நினைத்து … Read more

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி; ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

மாட்ரிட், ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கள்களை சந்தித்து வருகிறது.  முன்னதாக ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், மார்ச் மாத இறுதியில் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஒரு லிட்டர் எரிபொருளுக்கு 20 செண்ட் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த … Read more

கோடை வெயில் அதிகரிப்பு; பள்ளி நேரங்களை மாற்றி அமைக்கலாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி, இந்தியாவில் தற்போது கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களான டெல்லி, ராஜஸ்தான், பீகார், ஒடிசா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி எடுத்து வருகிறது. இதனிடையே கோடைக்காலத்தில் சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் … Read more

இத்தாலியன் ஓபன் டென்னிஸ்: 2 வது சுற்றில் நோவக் ஜோகோவிச், நடால் வெற்றி..!

இத்தாலி, செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் நம்பர் 1 அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளார். 2-வது சுற்றில் ரஷிய வீரரான அஸ்லான் கரட்சேவை எதிர்கொண்ட ஜோகோவிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மேலும் இன்று நடைபெற்ற 2 வது சுற்று ஒன்றில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், அமெரிக்காவின் … Read more

இலங்கையில் இன்றிரவு முதல் கடும் ஊரடங்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கொழும்பு, இலங்கையில் கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. நாடு முழுவதும்  ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டது.  தொடா்ந்து அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இலங்கை ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற அந்நாட்டு காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், இலங்கையில்  இன்றிரவு முதல் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது. … Read more

ஐபிஎல்: லக்னோ வெற்றிபெற 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத் அணி

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் இன்று நடைபெறும்  57-வது லீக் ஆட்டத்தில்  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.  இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி குஜராத் அணி முதலின் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக விருத்திமான் சாகாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர்.  சாகா 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த மேத்தீவ் வேட் … Read more

மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையை கைவிடுமாறும் – அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

கொழும்பு, இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு அதிபா் கோத்தபய ராஜபக்சேவின் அரசே காரணம் எனக்கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.  கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியது. இதனையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருதாகவும், ஒருமித்த கருத்து மூலம் அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாகவும் அதிபா் அதிபா் கோத்தபய ராஜபக்சே தனது டுவிட்டா் … Read more

“3 கோடி சிறுவர்களுக்கு தடுப்பூசி“ மத்திய மந்திரி மாண்டவியா பெருமிதம்

புதுடெல்லி, நாடு முழுவதும் 12 முதல் 14 வயது வரையிலான மூன்று கோடி சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.  கடந்த மார்ச் 16ம் தேதி முதல் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்,  சிறுமிகளுக்கு கோர்போவேக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 3 கோடி சிறுவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும், ஒரு கோடியே 20 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் மத்திய … Read more

பந்துவீச்சின் போது நடுவர் மீது தவறுதலாக பந்தை எறிந்த பொல்லார்ட்- வைரல் வீடியோ..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற  56-வது லீக் ஆட்டத்தில்  ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.  இந்த போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது 10-வது ஓவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் … Read more

திருகோணமலையிலிருந்து சோபர் தீவுக்கு தப்பியோடிய மகிந்த ராஜபக்சே குடும்பம் ! வைரலாகும் ஆடியோ

கொழும்பு, இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார். இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர். அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் … Read more