அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உக்ரைனுக்கு திடீர் பயணம்

கீவ், உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 10 வாரங்களை கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக கூறி வருகிறது.  தற்போது உக்ரைனின் கிழக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.  ரஷியா – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு  அமெரிக்கா மற்றும்  மேற்கத்திய நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன.  இத்தகைய சூழலில், திடீர் பயணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் படைன், உக்ரைனுக்கு சென்றுள்ளார். … Read more

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு பாதுகாப்பு அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், வர்த்தக நோக்கிலான விமானங்களை மீண்டும் இயக்க திட்டமிட்டு உள்ளது.  அடுத்த சில மாதங்களில் இதனை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 17ந்தேதி இந்த விமான நிறுவனத்தின் சேவை இயக்கப்பட்ட பின்னர் நிறுத்தப்பட்டது.  அப்போது நரேஷ் கோயல் அதன் உரிமையாளராக இருந்துள்ளார்.  தற்போது ஜெட் ஏர்வேசை ஜலான்-கல்ராக் கன்சோர்டியம் என்ற அமைப்பு ஏற்று நடத்துகிறது. இந்நிலையில், கடந்த வியாழ கிழமை ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து … Read more

நெட் பந்துவீச்சாளருக்கு கொரோனா உறுதியான நிலையில் பிரித்வி ஷா மருத்துவமனையில் அனுமதி..!!

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று  இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள 55-வது லீக் ஆட்டத்தில்  தோனி  தலைமையிலான சென்னை  அணியும் ரிஷப்  தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன.  ஒவ்வொரு போட்டிக்கு முன்னதாகவும் காலையில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அந்த வகையில் டெல்லி அணியில் இன்று காலை நெட் பௌலர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் அணியில் உள்ள வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் … Read more

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை! – நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவியது.

சியோல், வடகொரியா சனிக்கிழமையன்று பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தென் கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூன் சுக்-யோல் பதவியேற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.  நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் கடலில் செலுத்தியதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜப்பானும் இது குறித்த தகவலை ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களை ரூ.12 ஆயிரம் செலவில் சுற்றி பார்த்த நபர்

பெங்களூரு, கொரோனா பெருந்தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடு ஆகியவற்றால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.  ஆனால், பெங்களூருவை சேர்ந்த ஒரு நபர் நாட்டை சுற்றி பார்க்க ஆசைப்பட்டார். கேரளாவின் கண்ணூரை சேர்ந்த விசால் விஸ்வநாத் (வயது 32) என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு நகரத்திற்கு குடிபெயர்ந்து உள்ளார். கொரோனா பெருந்தொற்றால், அவர் நடத்தி வந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் இழப்பு ஏற்படுத்தியது.  ஆனால், சோதனையை சாதனையாக்க அவர் முடிவு செய்து, நாடு முழுவதும் … Read more

ஜெய்ஸ்வால் அதிரடி: 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.  தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் … Read more

இலங்கையுடன் மே 9ல் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை; சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

கொழும்பு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது.  எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு … Read more

கடுமையான பணவீக்கத்தால் திண்டாடும் மக்கள்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்

புதுடெல்லி,  வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஒரு சிலிண்டர் விலை 1015 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்  வயநாடு தொகுதி எம்.பியுமான  ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.414 ஆக இருந்தது. ஒவ்வொரு … Read more

பேர்ஸ்டோ அரைசதம்: ராஜஸ்தானுக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.  தவன் 12 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ … Read more

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை – லண்டன் கோர்ட் தீர்ப்பு

லண்டன், கடந்த 2020 மே 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அப்மினிஸ்டர் பகுதியில், ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அந்த நபரின் தலையில் கத்திக் குத்துக் காயங்களும், சிறுவனின் தோள் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  அவர்களும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் … Read more