ஈராக்கை தாக்கிய புழுதி புயல் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

பாக்தாத், உலகின் பல்வேறு நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் வெப்பத்தின் அளவு புதிய உச்சம் தொட்டு வருகிறது. வெப்பத்துடன் சேர்த்து புழுதி காற்றும் வீசி வருவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உள்பட 18 மாகாணங்களில் நேற்று திடீரென புழுதி புயல் வீசியது. இதனால், வானம் முழுவதும் தூசி, மண்ணால் சூழ்ந்தது.  குறிப்பாக அந்நாட்டின் அன்பர் மாகாணத்தில் புழுதி புயலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. புழுதி … Read more

சத்திஸ்கர்: திடீரென வெடித்த ஜேசிபி டயர்.! தூக்கியெறியப்பட்ட இருவர் பலி

சத்திஸ்கர், சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள வாகன பட்டறை ஒன்றில் ஜேசிபி எந்திரத்தின் டயரில் ஊழியர்கள் இருவர் காற்று நிரப்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது எதிர்பாராதவிதமாக டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இருவரும் மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் டயர் சேதமடைந்து இருந்ததால், வெடித்ததா, அல்லது அதிக அளவில் காற்று நிரப்பியதால், … Read more

"வேகமாக ஓடும் உங்களுடன் பேட்டிங் செய்ய முடியாது" – கோலியிடம் கூறிய மேக்ஸ்வெல்- வைரல் வீடியோ

மும்பை. 15வது ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு –  சென்னை அணிகள் மோதின . இந்த போட்டியில் சென்னை அணியை 13  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.  இந்த போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் 9-வது ஓவரில் விராட் கோலி கவர்ஸ் திசையில் இருந்த ராபின் உத்தப்பா-விடம் பந்தை அடித்துவிட்டு ஓட, அந்த பந்தை வேகமா உத்தப்பா கீப்பர் தோனியிடம் எறிந்தார்.  பிடித்த வேகத்தில் பந்தை … Read more

"எலான் மஸ்க் டுவிட்டரை மோசமாக்கலாம்"- பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து..!!

நியூயார்க், உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கினார். அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனம் … Read more

"எதிர்பாராத விதமாக இது போன்று நடக்கும்"- பாலியல் வன்கொடுமை குறித்து பெண் மந்திரி சர்ச்சை கருத்து

குண்டூர், ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள ரெபல்லே டவுன் ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை கர்ப்பிணிப் பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நாகயலங்காவுக்குச் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண்ணை 3 பேர்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் சந்தேகமுடைய மூன்று நபர்களும் கடந்த 1 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் ஆந்திரப் … Read more

ஐபிஎல் : தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி – ஹார்திக் பாண்டியா

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று   நடைபெற்ற 48-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் பெற்றது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 65 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் ரபடா 4 … Read more

நாங்கள் யோகா பற்றி பேசினோம் – பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ஐஸ்லாந்து பிரதமர் பேச்சு

கொபென்ஹஜென், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார். இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி … Read more

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை வழக்கில் இதுவரை 20 பேர் கைது – கேரளா போலீஸ் தகவல்

பாலக்காடு, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல் படுகொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் கடந்த மாதம் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சீனிவாசன்(45) கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது  என்று கேரள போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை கைது செய்யப்பட்ட நால்வரில் … Read more

"தோனியின் ஆலோசனையை கேட்டுக்கொள்"- இளம் வீரருக்கு தீபக் சாஹர் வழங்கிய அறிவுரை..!!

மும்பை, 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3 வெற்றி 9 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.  சென்னை அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பந்துவீச்சு சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக பவர்பிளே-வில் சென்னை அணி தொடக்க போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்கியது. ஒரு … Read more

ஐஸ்லாந்து பிரதமருடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

கொபென்ஹஜென், இந்திய பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். பயணத்தின் முதல் நாளான நேற்று முன் தினம் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றார். ஜெர்மனி பிரதமர் ஒலிப் ஸ்கோல்சை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.  இதனை தொடர்ந்து பயணத்தின் 2-வது நாளான நேற்று பிரதமர் மோடி டென்மார்க் சென்றார். அங்கு அவர் டென்மார்க் பிரதமர் பிரதமர் மிட்டீ ஃபெடிக்செனை சந்தித்து பேசினார். இந்நிலையில், பயணத்தின் 3-வது நாளான இன்று பிரதமர் மோடி … Read more