37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்… ஆச்சரியத்தில் மூழ்கிய தம்பதி

லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வருபவர்கள் ஜெரேமி சால்டா மற்றும் பாம் பேட்டர்சன்.  இவர்கள், உலகின் திருமண நகரம் என பெயர் பெற்ற லாஸ் வேகாஸ் நகரில் கடந்த 24ந்தேதி தங்களது திருமணம் நடைபெற வேண்டும் என விரும்பியுள்ளனர்.  அதற்காக தயாராகி வந்துள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நாளில் லாஸ் வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.  இதனால், திட்டமிட்டபடி தங்களது திருமணம் நடைபெறாமல் போய் விடுமோ என்று அச்சமடைந்து உள்ளனர். எப்படி … Read more

சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான வழக்கு; நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறி டெல்லி குற்றவியல் போலீசார் … Read more

ஆசிய பேட்மிண்டன் போட்டி: வெண்கலம் வென்றார் பி.வி.சிந்து..!!

மணிலா,  ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஹீ பிங் ஜியோவை (சீனா) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.  இந்நிலையில் இன்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக சாம்பியனும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான அகானா யமாகுச்சியை (ஜப்பான்) எதிர்கொண்டார்.  விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த … Read more

கொரோனா பாதிப்பு சரிவு: தென் கொரியாவில் கட்டாய முககவசம் ரத்தாகிறது..!!

சியோல்,  தென் கொரியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா அலை சரிந்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அடுத்த வாரம் முதல் ரத்தாகும் என பிரதமர் கிம் பூ கியும் அறிவித்துள்ளார்.  அதே நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிற பொது நிகழ்ச்சிகளில், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்போர் முககவசம் அணிய வேண்டும், இது கட்டாயம் ஆகும். அங்கு தனி மனித இடைவெளியை பின்பற்றுதல், பொது இடங்களில் கூடுவது தொடர்பான கட்டுப்பாடுகள் … Read more

நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ. 7 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸின் ரூ.7 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை  முடக்கியது. இரட்டை இலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலினுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரிடம் மோசடி செய்த ரூ.200 கோடி ரூபாயில், 5.71 கோடி ரூபாயை சந்திரசேகர் ஜாக்குலினுக்கு  பரிசாக கொடுத்ததாக  குற்றம் சாட்டியுள்ள அமலாக்கத்துறை, ஜாக்குலின் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நிரந்தர வைப்புத்தொகை ரூ.7 கோடியை … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; இறுதிப்போட்டியில் கேரளா – மேற்கு வங்கம் பலப்பரிட்சை!

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள், கேரள மாநிலம் மலப்புரத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதன்படி, கேரளா, மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் மணிப்பூர் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி … Read more

தலீபான்களுக்கு எதிராக புதிய போர் தொடங்கப்படும்..!! – முன்னாள் ராணுவ தளபதி சூளுரை

லண்டன்,  ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தலீபான் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கடுமையான தாக்குதல்களை நடத்தி நாட்டை தங்கள் வசம் ஆக்கினர். அதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சாமி சதாத், தலீபான்களுக்கு எதிராக புதிய … Read more

வரதட்சணைக்காக மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து யூடியூப்பில் வெளியிட்ட கணவன்

ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் பரத்பூர்  கமான் பகுதியை சேர்ந்த ஒருவர் அரியானாவை சேர்ந்த பெண்ணை கடண்டஹ் 2019 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டார். தம்பதிகள் ராஜஸ்தானில் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் வரதட்சணை கேட்டு அந்த நபரின் தாயார் அந்த பெண்ணை கொடுமைசெய்து வந்துள்ளார். இதனால், அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆனால், கணவர் அவரை ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீடு வந்ததும் கணவர் தனது உறவினர்கள் இருவரை வீட்டிற்கு அழைத்து உள்ளார். … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தாக்குப்பிடிக்குமா மும்பை அணி..? – இன்று மோதல்

மும்பை, நடப்பு தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி (ஜோஸ் பட்லர்- 3 சதம் உள்பட 499 ரன்), ஊதா நிற தொப்பி (யுஸ்வேந்திர சாஹல்- 18 விக்கெட்) இரண்டையும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களே தக்க வைத்துள்ளனர். சூப்பர் பார்மில் உள்ள ராஜஸ்தான் 8 ஆட்டங்களில் விளையாடி 6-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக ஆடிய 3 ஆட்டங்களிலும்வரிசையாக வெற்றிக்கனியைபறித்துள்ளது. ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான் பராக், கேப்டன் சாம்சன் பேட்டிங்கிலும், ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர … Read more

கொரோனா பாதிப்பு; உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 46.66 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா பாதிப்பு முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 27 லட்சத்து 36 ஆயிரத்து 640 ஆக … Read more