இந்தியாவில் 3 ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 927 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பு 2 ஆயிரத்து 541 மற்றும் நேற்றைய பாதிப்பு 2 ஆயிரத்து 483-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 65 ஆயிரத்து … Read more

பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி- புள்ளி பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேற்றம்

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புனேயில் இன்று நடைபெற்ற 39-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர் படிக்கல் ஒற்றை இலக்க … Read more

பஞ்சன் லாமா சீன குடிமகனாக சாதாரண வாழ்க்கை வாழ்கிறார் – சீனா

பீஜிங்,  திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமாவுக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இருக்கும் புத்த மத தலைவர் பஞ்சன் லாமா என அழைக்கப்படுகிறார். திபெத்தின் தற்போதைய தலாய் லாமா, கடந்த 1995-ம் ஆண்டு கெதுன் சோக்கி நைமா என்ற, 6 வயது சிறுவனை, 11-வது பஞ்சன் லாமாவாக தேர்வு செய்து, அறிவித்தார். பஞ்சன் லாமாவாக அறிவிக்கப்பட்ட அடுத்த சில நாட்களில் சிறுவன் நைமா மாயமானான். அதன் பின்னர் அவன் பொதுவெளியில் வரவே இல்லை. சிறுவனையும், அவனது … Read more

”மின் நெருக்கடி ஏன் உள்ளது” – ஜார்கண்ட் அரசுக்கு கிரிக்கெட் வீரர் டோனி மனைவி கேள்வி

ராஞ்சி நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு  பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு … Read more

தனியார் வசமானதால் சா்வதேச விமான போக்குவரத்தில் அரசின் முன்னுரிமையை இழந்த ஏா் இந்தியா!

புதுடெல்லி, வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் அரசின் முன்னுரிமையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா இழந்தது. விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய சுற்றறிக்கையின்படி, சா்வதேச போக்குவரத்து விவகாரங்களில்  ஏா் இந்தியா  நிறுவனத்துக்கு இருந்து வந்த சில முன்னுரிமைகளை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது. பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏா் இந்தியாவுக்கு, வெளிநாடுகளுடனான சா்வதேச விமானப் போக்குவரத்தில் முன்னுரிமை வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருந்தது.  ஒரு வாரத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை பரஸ்பர அடிப்படையில் நாடுகளுக்கிடையில் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூருவை பழிதீர்க்கும் முனைப்பில் ராஜஸ்தான்..!!

புனே,  8 ஆட்டங்களில் விளையாடி 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என்று 10 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 68 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இந்த சீசனில் ஒரு அணியின் மோசமான ஸ்கோர் இது தான்.  விராட் கோலி தொடர்ந்து 2 ஆட்டங்களில் ‘டக்-அவுட்’ ஆகி இருப்பது கடும் விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இதே நிலை நீடித்தால் அவரது இடத்துக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் கூடுதல் கவனமுடன் … Read more

டுவிட்டரை முன் எப்போதையும் விட சிறந்ததாக்க விரும்புகிறேன்; டுவிட்டர் உரிமையாளராக எலான் மஸ்க் பதிவிட்ட முதல் டுவீட்!

நியூயார்க், பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க முன் வந்தார்.  இதனையடுத்து, டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு டுவிட்டர் நிறுவனம் சம்மதித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை, இந்த ஒப்பந்தம் இறுதியானது. ஏற்கனவே டுவிட்டரின் 9% பங்குகளை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக … Read more

’லிப்ட்’ கொடுப்பதுபோல் கடத்தி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை – உடலை கிணற்றில் வீசிய கொடூரம்

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் 35 வயது நிரம்பிய பெண் அம்மாநிலத்தின் துஷா மாவட்டத்தில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். ஜெய்ப்பூரில் இருந்து பஸ்சில் சென்ற அந்த பெண் துஷா மாவட்டத்திற்கு வந்தடைந்துள்லார். தனது பெற்றோரின் வீடு அமைந்துள்ள ஊருக்கு அந்த பெண் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியே காரில் வந்த சிலர் நாங்களும் அவ்வழியாக செல்கிறோம் உங்களுக்கு ‘லிப்ட்’ தருகிறோம் என கூறியுள்ளனர். இதனை நம்பிய … Read more

சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர்; அரையிறுதிக்குள் நுழைந்த மேற்கு வங்கம், கர்நாடகா அணிகள்!

திருவனந்தபுரம், 75-வது தேசிய அளவிலான சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர், கேரள மாநிலம் மலப்புரத்தில்  நடைபெற்று வருகிறது. சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடரில், மலப்புரம் கொட்டப்பாடி பய்யநாடு மைதானத்தில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ பிரிவு ஆட்டத்தில், மேற்கு வங்கம்-ராஜஸ்தான் அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  முக்கியமான இந்த  ஆட்டத்தில் மேற்கு வங்க  அணி, 3-0 என்ற கோல் கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், மேற்கு வங்கம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.  முன்னதாக, பஞ்சாப் … Read more

‘உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்: அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க மந்திரிகள் தகவல்

கீவ்,  ரஷியாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 2 மாதங்களை கடந்தும் நீடிக்கிறது. 21-ம் நூற்றாண்டின் வரலாற்று ஏடுகளில் கறுப்பு அத்தியாயமாக தொடரும் இந்த போருக்கு முடிவுரை எழுத இன்னும் முடியவில்லை. உக்ரைனின் வளமான பகுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களும் நிர்மூலமாகி வருகின்றன. அதில் வசித்து வரும் மக்கள் அண்டை … Read more