சதங்களின் நாயகன்.. யுகத்தின் தலைவன் – கிரிக்கெட்டின் கடவுளுக்கு பிறந்தநாள் இன்று..!

மும்பை சச்சின் தெண்டுல்கர் பெயர் அனைத்தையும் சொல்கிறது. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லிஜண்ட்  கிரிக்கெட் உலகில் அவரது அசாதாரண செயல்திறனுக்காக வழங்கப்பட்ட தலைப்புகளில் சில மட்டுமே. சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 49 வயதாகிறது. சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை  முன்னிட்டு அவருக்கு  வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள  அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய … Read more

ஷாங்காய் மாநகரில் ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சீன அரசு அதிரடி உத்தரவு!

பீஜிங், சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. ஜீரோ கொரோனாகொள்கையை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது. … Read more

இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ஐரோப்பிய ஆணைய தலைவர் டெல்லி வருகை

புதுடெல்லி, ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்தியா வந்துள்ள உர்சுலா வொன் டெர் லியென், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை … Read more

ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 24 வயதான ரவிகுமார் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். அவர் ஏற்கனவே 2020, 2021-ம் ஆண்டுகளிலும் … Read more

நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக,அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத … Read more

தினசரி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு நாளில் 2,593 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி, நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வருகிறது.  நேற்று முன் தினம் 2,451 நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்ந்தது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,54,952 லிருந்து 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது.   ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகினர். இதுவரை 5,22,193 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதுவரை … Read more

ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொல்கத்தா, ஆமதாபாத்தில் நடக்கும்- கங்குலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (மே 24-ந்தேதி), வெளியேற்றுதல் சுற்று (மே 26-ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று (மே 27-ந்தேதி), இறுதிப்போட்டி (மே 29-ந்தேதி) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டம்

கொழும்பு, இலங்கையில் நிலவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.  இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.  அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல் என்றும் அவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். … Read more

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ (மன்கிபாத்) என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களுரு அணியை பந்தாடிய ஐதராபாத்..!! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். 7 பந்துகளை சந்தித்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த … Read more