ரெயிலில் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘செய்தித்தாள்’, உரிமதாரருக்கு எச்சரிக்கை

பெங்களூரு நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்  சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் உள் சேவைகள் உரிமதாரருக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ரெயில் பயணிகளுக்கு பெங்களூரில் இருந்து வெளிவரும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. அதில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களின் இனப்படுகொலை செயயப்பட்டது அங்கீகரிக்கப்பட வேண்டும்” மற்றும் … Read more

தூத்துக்குடியில் பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தொடங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் பெருந்துறைமுக விளையாட்டு கழகம் ஆகியவை இணைந்து, அகில இந்திய பெருந்துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டியை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக மைதானத்தில் நடத்தியது. இந்த போட்டிகளில் 4 பெருந்துறைமுக அணிகள் பங்கேற்று உள்ளன.  போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா முன்னிலை வகித்தார். வ.உ.சி. துறைமுக விளையாட்டு கழக தலைவர் சுரேஷ் பாபு வரவேற்று பேசினார். … Read more

வியாழன் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் …!

லண்டன் நமது சூரிய குடும்பத்தில்  புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய கோள்களைத் தாண்டி 5-வதாக அமைந்திருக்கும் வியாழன், ஒரு வாயுக் கோளம். இங்கு ஒரு நாள் என்பது 10 மணிக்கும் குறைவான நேரமே. 9 மணி 50 நிமிடத்தில் இந்தக் கோள் தன்னைத்தானே சுற்றிவிடுகிறது. சந்திரன், வெள்ளிக்கு அடுத்தபடியாக சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்கும் கோள் ஆகும். பூமியைவிட இரண்டரை மடங்கு ஈர்ப்புவிசை கொண்ட வியாழன், சூரியக் குடும்பத்தில் உள்ள பிற கோள்களின் ஒட்டுமொத்த நிறையைக் … Read more

இந்தியா ரஷியாவை சார்ந்து இருப்பதை விரும்பவில்லை: அமெரிக்கா சொல்கிறது

வாஷிங்டன், இந்தியா தனது பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரஷியாவை சார்ந்து இருப்பதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்று பெண்டகன் தெரிவித்துளது.  அமெரிக்காவின் ராணுவ தலைமையகமாக பெண்டகன் செய்தி  தொடர்பு செயலர் ஜான் கிர்பி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருப்பதை நாங்கள்  விரும்பவில்லை என்பதை இந்தியா மற்றும் பிற நாடுகளுடன் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.  அதேநேரத்தில்,  இந்தியாவுடன் நாங்கள் கொண்டிருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிக்கிறோம்.  இதை மேம்படுத்துவதற்கான வழிகளையும் நாங்கள் … Read more

டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம்செய்பெர்ட் மற்றும் 4 உதவியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் அணியின் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாண்டிங்குக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட … Read more

இந்தியா-அமெரிக்க உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன், மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்,  சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டம் உள்பட பல கூட்டங்களில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு கிளம்பும் முன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.   இந்திய செய்தியாளர்கள் குழுவுடனான உரையாடலின் போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா-அமெரிக்கா … Read more

உலகின் மிகப்பெரிய மருந்தகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி, இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டின் 7வது பதிப்பு ஏப்ரல் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டில்  பேசிய அவர் கூறியதாவது:- “இன்று, நாம் உலகின் மருந்தகமாக இருக்கிறோம், மேலும் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 17 கோடிக்கும் அதிகமான … Read more

“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” – சென்னை கேப்டன் ஜடேஜா

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தபரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி -வது வெற்றியை பெற்றது.  இதில் மும்பை நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி 6,4,2,4 என ரன்கள் விளாசி வெற்றி பெற்ற வைத்தார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக … Read more

தீவிரமடையும் போராட்டம்…இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

கொழும்பு,  இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி … Read more

டெல்லி: பைக் மீது கார் மோதிய விபத்தில் அந்தரத்தில் பறந்த நபர் !

புதுடெல்லி, டெல்லி அருகே காசியாபாத் வேவ் சிட்டியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக்கின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டார். அவர் காரில் மோதி சுழன்றபடி தூக்கிவீசப்பட்டார். அதே நேரத்தில் அவரது பைக் காரால், சில மீட்டர்கள் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் … Read more