அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஷாங்காய்

பீஜிங், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கானப்படுகிறது. சீனாவின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய, வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா … Read more

ரூ.50 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சரிபார்க்க உயர்மட்ட கமிஷன்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கே.பாட்டீல். இவர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக குற்றம் சாட்டிய நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ஈஸ்வரப்பா தனது மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இந்த நிலையில், கர்நாடகா முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : 20 ஓவர் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து பிரித்வி ஷா புதிய சாதனை..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த  பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் … Read more

இங்கிலாந்து பிரதமர் இன்று இந்தியா வருகிறார்

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று (21-ந் தேதி) 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். அவர் லண்டனில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு இன்று வந்து சேருகிறார். அங்கு முதலீடு மற்றும் வர்த்தக விஷயங்களை கவனிக்கிறார். அங்குள்ள பல்கலைக்கழகத்துக்கும் செல்கிறார். சில கலாசார இடங்களையும் பார்வையிட திட்டமிட்டுள்ளார். 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொழில் அதிபர்களையும் அவர் சந்தித்து பேசுகிறார். அவரது இந்தப் பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி … Read more

இந்தியாவில் மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 247-ஐ விட அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 47 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா … Read more

ஓபன் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரருக்கு முதல்-அமைச்சர் பாராட்டு

சென்னை, ஸ்பெயினில் நடைபெற்ற 48-வது லா ரோடா சர்வதேச ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில், சென்னையைச் சேர்ந்த குகேஷ் 8 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார்.  மொத்தம் 9 சுற்றுகள் கொண்ட போட்டியில் தோல்வியின்றி 7 வெற்றிகளையும், 2 டிராக்களையும் அவர் பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 7 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் … Read more

இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவம் – உலக நாடுகள் கண்டனம்

கொழும்பு, அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.  பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் … Read more

பிரதமரின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் நம்பிக்கை

புதுடெல்லி, பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் … Read more

“தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார்” – கவாஸ்கர் பாராட்டு

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்.  அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக் விரும்புகிறார். அவரது வயதை பார்க்காமல், அவர் … Read more

உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், டிரோன்களை வழங்கும் ஜப்பான்..!!

டோக்கியோ,  உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகிறது. இந்த வேளையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுபற்றி ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி. சூட்டுகள் (அணு, உயிரி, ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரானவை), முககவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை … Read more