உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.78 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

நாடு முழுவதும் 700 இடங்களில் நாளை தொழில் பயிற்சி விழா…!

புதுடெல்லி, பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக்கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தொழில் பயிற்சியை அங்கீகரிக்கிறது. இதன் மூலம், நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் 700-க்கு மேற்பட்ட இடங்களில் தொழில் பயிற்சி விழா நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியை பயிற்சி இயக்குனரகத்துடன் இணைந்து திறன் இந்தியா நடத்துகிறது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்றது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு  பிளேசிஸ் … Read more

பாகிஸ்தான்: கடும் விமர்சனத்துள்ளான புதிய சுகாதார அமைச்சர் அப்துல் காதர் படேலின் நியமனம்..!!

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த இம்ரான்கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் 34 பேரை கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றது. மந்திரிகளின் பதவியேற்பு விழா நேற்று முன்தினமே … Read more

“போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?” – எடியூரப்பா கேள்வி

பெங்களூரு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். 12 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா? ஆனால் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அப்பாவிகளை கைது செய்ய … Read more

'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய பி.வி சிந்து – வைரலாகும் வீடியோ..!

சென்னை, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். View this post on Instagram A post shared by Sindhu Pv (@pvsindhu1)

லாவோஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் பலி..!!

வியன்டியேன்,  தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக, அந்த நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, … Read more

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை; ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா என்ற இடத்தில் அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை போலீசார் மற்றும் படையினர் கைப்பற்றினர்.  அவற்றில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதனை பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா? … Read more

இது தான் என் திட்டம்.. ஆனால்.. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து

மும்பை, ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.  20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில்  அதிகபட்சமாக பட்லர்  சதம் அடித்தார்   218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பி.யில் 6 மாவட்டங்களில் முக கவசம் கட்டாயம்..!!

லக்னோ,  கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், டெல்லியை ஒட்டிய 6 மாவட்டங்கள் மற்றும் லக்னோவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 3-வது அலை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. டெல்லி, அரியானா அவற்றை ஒட்டி உத்தரபிரதேச எல்லைக்குள் அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில் கொேரானா பரவல் உயர்ந்து வருகிறது. தேசிய தலைநகர் … Read more