"ஓட்டல்களில் தங்கக்கூடாது; உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது" – உ.பி. மந்திரிகளுக்கு யோகி ஆதித்யநாத் கிடுக்கிப்பிடி

லக்னோ, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச மந்திரிகள், அரசுமுறை பயணமாக வெளியூர் செல்லும்போது, ஓட்டல்களில் தங்கக்கூடாது. விருந்தினர் விடுதிகளில்தான் தங்க வேண்டும். அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மந்திரிகள், தங்கள் உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமிக்கக்கூடாது.  அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை … Read more

பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்..!

சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்துகிறது.  இந்த போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம்., பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் … Read more

பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது காங்கிரசை புறக்கணிப்பது சரியல்ல – சரத்பவார் கருத்து

மும்பை,  மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவர், எதிக்கட்சிகள் ஆளும் முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “நாட்டின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜனதாவின் நடவடிக்கைகள் குறித்து, வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். பா.ஜனதாவை எதிர்த்து போராடவும், நாட்டில் தகுதியான அரசு அமையவும் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். … Read more

"இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவுக்கு வரும்" – ப.சிதம்பரம் எச்சரிக்கை

சென்னை, தவறான பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவுக்கும் வரும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் எச்சரித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார். ‘தவறான பொருளதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்.  வந்துவிட்டது என்று கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என்று எச்சரிக்கிறேன்’ என்று அவர் கூறினார்.

தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்-அமைச்சர்..!

சென்னை,  தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு ரூ.42 லட்சம் ஊக்கத் தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் அனுமதியுடன் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி தமிழக அணி 11-வது … Read more

அமெரிக்காவில் மெட்ரோ சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது

நியூயார்க், அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் பயங்கர துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என 10 பேரும், சம்பவத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 13 பேர் வரை காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. எனினும், துப்பாக்கிச்சூடு யார் நடத்தியது என்ற விவரம் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், புரூக்ளின் மெட்ரோ சுரங்க பாதையில் துப்பாக்கிச்சூடு … Read more

ரூ.2.4 கோடி பணம், நகை கொள்ளை: நடிகை சோனம் கபூர் வீட்டில் கைவரிசை காட்டிய நர்ஸ் கைது கணவரும் சிக்கினார்

புதுடெல்லி,  இந்தி திரையுலகில் பிரபல நடிகையான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜாவின் டெல்லி வீட்டில் இருந்து ரூ.2.4 கோடி நகை, பணம் கடநத சில நாட்களுக்கு முன்பு கொள்ளை போனது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த வீட்டில் பணி செய்து வரும் 20 வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அங்கே நர்சாக வேலை பார்த்து வந்த அபர்ணா ரூத் வில்சன் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரிடம் … Read more

ஐபிஎல் : விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி.!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள்  மோதின   . இந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது .இந்த போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது . அதே நேரத்தில், மும்பை அணி விளையாடியுள்ள 5 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி  அடைந்திருக்கிறது . இது … Read more

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட 'மெகி புயல்' – பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல்கள் தாக்குகின்றன. இவை அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை ‘மெகி’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் பிலிப்பைன்சின் பல மாகாணங்களை புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக மத்திய மாகாணமான லெய்டே கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளகாடாகி உள்ளது. … Read more

கோவில் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை திருவனந்தபுரத்தில் விமான நிலைய ஓடுபாதை மூடல்..!

திருவனந்தபுரம், பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நாளை (ஏப்ரல் 15) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடுபாதை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த நேரத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மற்றும் இன்று … Read more