இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் நியமனம்

கொழும்பு, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக  பொறுப்பேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  “தேசிய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கிறிஸை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். இலங்கை அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் அவரிடம் உள்ளது. ,” என்று இலங்கை … Read more

ரஷிய படைகளின் போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கிறது: உக்ரைன் அதிபர்

ரெயில் நிலைய தாக்குதல் பலி 52 ஆனது உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அவ்விருநாடுகளையும் தாண்டி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்றைக்குத்தான் இந்தப்போர் முடிவுக்கு வரப்போகிறதோ என்று ஒவ்வொருவரும் எண்ணத்தலைப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு ரஷியாவால் வெற்றி பெற முடியவில்லை. அந்த நாடு, உக்ரைனில் ராணுவ கட்டமைப்புகளை தாண்டி தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதுதான் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் கிழக்கு உக்ரைனில் கிராமடோர்ஸ்க் நகர ரெயில் நிலையத்தின்மீது ராக்கெட் … Read more

24 பினாகா ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி,  பினாகா ஏவுகணை அமைப்பை புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் மற்றொரு ஆய்வகமான அதிசக்தி பொருட்கள் ஆய்வகத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பினாகா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக பினாகா எம்கே-1 உள்ளது. புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதிக தொலைவு சென்று தாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை … Read more

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

புனே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன.  புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் தலா … Read more

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது…!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.  ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா … Read more

ராம நவமி; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

புதுடெல்லி, இந்தியாவில் இன்றைய தினம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தசரத மன்னரின் மகனாக ஸ்ரீராமர் பிறந்த தினம் ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;- “ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் … Read more

“பழைய பாகிஸ்தானை மீண்டும் வரவேற்கிறோம்” – நாடாளுமன்றத்தில் பிலாவல் பூட்டோ பேச்சு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி நாடாளுமன்றம் … Read more

சரத்பவார் வீட்டின் முன் நடந்தது, கொலை முயற்சி சம்பவம்- சிவசேனா பெண் தலைவர்

போராட்டம் மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டின் முன் நேற்று முன்தினம் திடீரென போக்குவரத்து கழக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சிலர் செருப்பு, கற்களை சரத்பவாரின் வீட்டை நோக்கி வீசினர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கொலை முயற்சி சம்பவம் … Read more

ஐபிஎல்: தொடரும் சென்னை அணியின் தோல்வி..! முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் வெளியேறினர்.  சென்னை அணியில் அதிகபட்சமாக … Read more